ஆயுதங்களுடன் டிக் டாக் வீடியோ வெளியிட்ட தமன்னா - போலீசார் தீவிர விசாரணை

ஆயுதங்களுடன் டிக் டாக் வீடியோ வெளியிட்டு, சங்ககிரியில் மறைந்திருந்த தமன்னாவை போலீசார் கைது செய்து, கோவைக்கு அழைத்து வந்து விசாரித்து வருகின்றனர். தமன்னா மீது ஆயுத சட்டம் உட்பட 2 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


கோவை: கோவையில் டிக் டாக் ரவுடிகள் பயங்கர ஆயுதங்களுடன் வீடியோ வெளியிட்டு அச்சுறுத்தினர். இந்த நிலையிலே டிக் டாக் வீடியோக்களை கைப்பற்றிய காவல் துறையினர் அவர்களை கைது செய்ய திட்டமிட்டனர். அதன் அடிப்படையில், மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் உத்தரவுக்கிணங்க, தனிப்படை போலீசார் ஒரே நாளில் பத்துக்கு மேற்பட்ட டிக் டாக் ரவுடிகள் உட்பட 48 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.

இதன் தொடர்ச்சியாக ஆயுதங்களுடன் வீடியோ வெளியிட்டு இருந்த விக்கு மற்றும் தமன்னா மீது வழக்கு பதிந்த போலீசார் அவர்களை தனிப்படை அமைத்து தேடினர். சங்ககிரியில் இருந்த தமன்னாவை பிடித்த போலீஸார், கோவை அழைத்து வந்துவிசாரணை நடத்தி வருகின்றனர். இவர் மீது ஆயுதசட்டம் உட்பட இரு பிரிவிகளில் வழக்கு பதிவு செய்த தனிப்படை போலீசார், அவரை பீளமேடு காவல்நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இந்த நிலையில், தமன்னா சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். பயங்கர ஆயுதங்களுடன் வெளியிட்ட வீடியோ குறித்து பேசி இருந்த தமன்னா, இரண்டு வருடங்களுக்கு முன்பு அந்த வீடியோவை வெளியிட்டு இருந்ததாகவும், தற்போது திருமணமாகி கணவருடன் வாழ்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி, அவர் தற்பொழுது கர்ப்பிணியாக இருப்பதாகவும் அந்த வீடியோவில் தமன்னா தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...