நெருக்கடியைக் கண்டித்து ஒரு நாள் முழுவிடுப்பு போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கம்

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்களுக்கு பல்வேறு நெருக்கடியான வேலைப் பணிகள் விதித்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. மேலும், தமிக அரசால் அமல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களுக்கு இத்துறையைச் சார்ந்தவர்களையே அதிகமாகவும், நேர வரையரை இன்று வேலை வாங்குவதாகவும் ஊரக வளர்ச்சித் துறை ஊழியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

தொடர்ந்து, மகாத்மா காந்தி வேலை வாய்ப்புத் திட்டத்திற்கான நிதி ஒதுக்காமல், பதிவேடுகளின் எண்ணிக்கையை மட்டும் அதிகப்படுத்துவதாகவும், அதனை எழியமைப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், தனிநபர் கழிப்பறை, கால்நடை வழங்குதல், நலத்திட்ட உதவிகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்த எங்கள் துறை ஊழியர்கள் சார்பில் ஆலோசனைகள் வழங்கப்பட்டும் அதனை பொருட்படுத்தாமல் தொடர்ந்து வேலைப்பழுவை மட்டுமே தினித்து வருவதாகவும், அரசு விடுமுறை நாட்களிலும் ஏதேனும் கூட்டம் அல்லது நிகழ்ச்சி வைத்து ஊழியர்களை அலுவலகத்திற்கு வரவைப்பதாகவும் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

எனவே, இத்தகைய ஊழியர் விரோதப் போக்கை தடுக்கக்கோரி இன்று ஒட்டுமொத்த விடுப்பு போராட்டத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தினர் ஈடுபட்டுள்ளனர். 

மேலும், இதுகுறித்து உரிய விசாரணை மேற்கொண்டு தீர்வுகாண வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களிடமும் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் மனுவும் அளிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...