வங்கிகளில் ரூ.10 நாணயங்களை வாங்க மறுத்தால் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும்- பாஜக இளைஞர் அணி

வங்கிகளில் பத்து ரூபாய் நாணயங்களை வாங்க மறுத்தால் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக பாஜக இளைஞர் அணி மாவட்ட செயலாளர் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.



இது தொடர்பாக இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்த அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்திய அரசால் அங்கீகரிப்பட்டு ரிசர்வு வங்கியால் வெளியிடப்பட்டுள்ள பத்து ரூபாய் நாணயங்கள் தற்போது புழக்கத்தில் உள்ளன. 

ஆனால் பெரும்பாலான கடைகள், வங்கிகள், பேருந்துகள், சுங்கச்சாவடிகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இந்த பத்து ரூபாய் நாணயங்களை வாங்க மறுத்து வருகின்றனர். 

இதனால் பத்து ரூபாய் நாணயங்களை வைத்திருப்போர் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். சில தவறான பிரச்சாரங்களால் தான் இம்மாதிரியான நிலை ஏற்பட்டுள்ளது. 

உடனடியாக மாவட்ட ஆட்சியர் தலையிட்டு 10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், வங்கிகளில் பத்து ரூபாய் நாணயத்தை வாங்க மறுத்தால் வங்கி வாசலில் அமர்ந்து தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் என பாஜக இளைஞர் அணி செயலாளர் மணிகண்டன் தெரிவித்தார்.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...