கோவை - பொள்ளாச்சி இடையே கூடுதல் ரயில் இயக்க கோரிக்கை!

பொள்ளாச்சி ரயில்வே நிலையத்தில் பாலக்காடு கோட்ட ரயில்வே மேலாளர் எஸ்.பால்சிங்தோமர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது கோவை - பொள்ளாச்சி இடையே கூடுதல் ரயில் இயக்க பொள்ளாச்சி ரயில் பயணிகள் நலசங்க சார்பில் மனு அளிக்கப்பட்டது.


கோவை: கோவை - பொள்ளாச்சி இடையே கூடுதல் ரயில் இயக்க பொள்ளாச்சி ரயில் பயணிகள் நலசங்க சார்பில் மனு அளிக்கப்பட்டது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி ரயில்வே நிலையத்தில் பாலக்காடு கோட்ட ரயில்வே மேலாளர் எஸ்.பால்சிங்தோமர் ஆய்வு மேற்கொண்டார். ரயில்வே பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மின் மயமாக்கல் நிறைவு பணியைப் பார்வையிட்டதுடன், பயணிகளுக்கு அடிப்படை வசதி எவ்வாறு உள்ளது எனவும் ஆய்வு செய்தார்.

முன்னதாக பாலக்காடு ரயில் நிலையத்திலிருந்து வரும் போது தண்டவாளத்தின் உறுதித் தன்மை, அதிர்வு உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொண்டார். இந்த நிலையில் பொள்ளாச்சி ரயில் பயணிகள் நலசங்க தலைவர் பாலகிருஷ்ணன், துணைத் தலைவர் நல்லசாமி மற்றும் பலர் பாலக்காடு கோட்ட மேலாளர் எஸ்.பால்சிங்தோமரிடம் பல்வேறு கோரிக்கை மனுவை அளித்தனர்.

அந்த மனுவில், பொள்ளாச்சி வழித்தடத்தில் மீட்டர் கேஜ் இருப்புப் பாதை நடைமுறையில், இருக்கும் போது அந்த வழித்தடங்களில் இயக்கப்பட்ட அனைத்து ரயில்களையும் மீண்டும் இயக்க வேண்டும். பொள்ளாச்சியிலிருந்து கிணத்துக்கடவு, போத்தனூர் வழியாக கோவைக்கு இயக்கப்படும் ரயில்களின் வேகத்தை 100 கி.மீட்டராக அதிகப்படுத்த வேண்டும். பொள்ளாச்சி ரயில் நிலையத்திற்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் கட்டமைப்பு வசதிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

மனுவை பெற்று கொண்ட கோட்ட மேலாளர் கூறும்போது, பொள்ளாச்சி ரயில் நிலையத்துக்குத் தேவையான அடிப்படை மற்றும் கட்டமைப்பு வசதிகளை மத்திய அரசின் அம்ரித்பாரத் திட்டத்தின் கீழ் நிறைவேற்றப்படும். பொள்ளாச்சியிலிருந்து புதிய ரயில்கள் இயக்க பரிந்துரைக்கப்படும், என்றார்.

Newsletter

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...