தாராபுரம் அடுத்த தேவநல்லூர் அருகே இருசக்கர வாகனத்தின் மீது பால்வண்டி மோதியதில், விவசாயி செந்தில்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து அலங்கியம் போலீசார், பால் வாகன ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாரபுரம் அருகே இருசக்கர வாகனத்தின் மீது பால் வண்டி மோதியதில் விவசாயி ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தாராபுரம் அருகே உள்ள சின்னக்கம்பாளையம் வரக்காடு பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். விவசாயியான இவர், நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு தனது இருசக்கர வாகனத்தில், செல்லாம்பாளையத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார்.
பின்னர், அங்கிருந்து உடுமலை சாலை வழியாக சின்னக்கம்பாளையம் நோக்கி வந்துள்ளார். அப்போது தேவநல்லூர் அருகே தாராபுரம் நோக்கி வந்த பால் வாகனம் செந்தில்குமாரின் இருசக்கர வாகனத்தின் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் நிலை தடுமாறி கிழே விழுந்த செந்தில்குமார் காயமடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். அவரை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில் பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து பால்வண்டியை ஓட்டி வந்த காரணம்பேட்டையை சேர்ந்த ஓட்டுனர் அருண்குமார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்தில் பலியான விவசாயி செந்தில்குமாருக்கு மனைவியும் ஒரு மகனும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தாராபுரம் அருகே உள்ள சின்னக்கம்பாளையம் வரக்காடு பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். விவசாயியான இவர், நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு தனது இருசக்கர வாகனத்தில், செல்லாம்பாளையத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார்.
பின்னர், அங்கிருந்து உடுமலை சாலை வழியாக சின்னக்கம்பாளையம் நோக்கி வந்துள்ளார். அப்போது தேவநல்லூர் அருகே தாராபுரம் நோக்கி வந்த பால் வாகனம் செந்தில்குமாரின் இருசக்கர வாகனத்தின் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் நிலை தடுமாறி கிழே விழுந்த செந்தில்குமார் காயமடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். அவரை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில் பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து பால்வண்டியை ஓட்டி வந்த காரணம்பேட்டையை சேர்ந்த ஓட்டுனர் அருண்குமார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்தில் பலியான விவசாயி செந்தில்குமாருக்கு மனைவியும் ஒரு மகனும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.