கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே முத்துக்கவுண்டனூரில் குடிபழக்கத்தால் ஏற்பட்ட குடும்பத்தகராறால், ஓர்க் ஷாப் தொழிலாளி நாராயணசாமி என்பவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: கிணத்துக்கடவு அருகே முத்துக்கவுண்டனூரில் உள்ள மாரியம்மன் கோவில்வீதியை சேர்ந்தவர் நாராயண சாமி(வயது49). இவர் ஒர்க்ஷாப்பில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு செல்வி(வயது44) என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர்.
இதற்கிடையில் நாராயணசாமி மது குடிக்கும் பழக்கத்துக்கு அடிமையானதாக கூறப்படுகிறது. இதனால் தினமும் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது.
மேலும், குடிபோதையில் வீட்டுக்கு வந்த நாராயணசாமி பொருட்களை அடித்து உடைத்ததோடு மனைவியிடம் தகராறில் ஈடுபட்டார். இதனால், அவரது மனைவி தனது குழந்தைகளுடன் அருகில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார்.

பின்னர் நள்ளிரவில் வீட்டிற்கு வந்து பார்த்தபோது துப்பட்டாவால் நாராயணசாமி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இது குறித்து கிணத்துக்கடவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
இதற்கிடையில் நாராயணசாமி மது குடிக்கும் பழக்கத்துக்கு அடிமையானதாக கூறப்படுகிறது. இதனால் தினமும் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது.
மேலும், குடிபோதையில் வீட்டுக்கு வந்த நாராயணசாமி பொருட்களை அடித்து உடைத்ததோடு மனைவியிடம் தகராறில் ஈடுபட்டார். இதனால், அவரது மனைவி தனது குழந்தைகளுடன் அருகில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார்.
பின்னர் நள்ளிரவில் வீட்டிற்கு வந்து பார்த்தபோது துப்பட்டாவால் நாராயணசாமி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இது குறித்து கிணத்துக்கடவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.