கோவையில் வீட்டில் புகுந்து கொள்ளை முயற்சி - வீட்டின் உரிமையாளரிடம் வசமாக சிக்கிய திருடன்!

கோவை சிங்கநல்லூரில் வீட்டில் நுழைந்து ரொக்கபணத்தை திருட முயன்ற சஞ்சய் ராஜ் என்பவரை, வீட்டின் உரிமையாளர் ஜீவானந்தம் கையும் களவுமாக பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.


கோவை: கோவை சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜீவானந்தம். காசாளராக பெட்ரோல் பங்க் ஒன்றில் பணியாற்றி வருகின்றார். இந்த நிலையில் இவர் தனது வீட்டின் அருகேஉறவினருடன் பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது வீட்டினுள் ஏதோ உருட்டல் சத்தம் கேட்டுள்ளது. உள்ளே சென்று பார்த்தபொழுது இளைஞர் ஒருவர் உலாவுவது தெரியவந்தது.

வீட்டில் பணம், மணி பர்ஸ், டிரைவிங் லைசன்ஸ் உள்ளிட்டவற்றை ஒவ்வொன்றாக அந்த நபர் எடுத்துக் கொண்டிருந்தார். அந்த நபரை உடன் பேசிக் கொண்டிருந்த உறவினர்கள் உதவியுடன் ஜீவானந்தம் கையும் களவுமாகப் பிடித்தார். இது தொடர்பாகசிங்காநல்லூர் காவல் நிலையத்திற்கு அவர் புகார் அளித்தார்.

ஜீவானந்தம் தனது உறவினர்கள் உதவியுடன் அந்த நபரை பிடித்து போலீஸிடம் ஒப்படைத்தார். போலீஸ் விசாரணையில், வீட்டில் கொள்ளை அடிக்க முற்பட்ட நபர் சஞ்சய் ராஜ் என்பது தெரியவந்தது. சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த சிங்காநல்லூர் போலீசார், சஞ்சய்ராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...