கோவையில் பீகார் தொழிலாளி மீது தாக்குதல் - டாஸ்மாக் பார் ஊழியர் கைது!

கோவை மாவட்டம் அன்னூர் அருகே டாஸ்மாக்கில் ஏற்பட்ட தகராறில் பீகார் தொழிலாளி திலீப் கேவட்டை தாக்கிய, சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த டாஸ்மாக் பார் ஊழியர் பிரசன்னகுமார் என்பவரை போலீசார் கைது செய்தனர்.


கோவை: கோவை மாவட்டம், அன்னூர் அருகே காட்டம்பட்டியில் தங்கி, தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருபவர் பீகார் மாநிலம் பாட்னாவைச் சேர்ந்த திலீப் கேவட்(வயது 34). இவர் நேற்று மாலை கணேசபுரத்தில் உள்ள டாஸ்மாக் பாரில் மது குடிக்க சென்றுள்ளார்.

அப்போது, அங்கு சப்ளையராக பணிபுரிந்து வரும் சிவகங்கையை சேர்ந்த ஜேசுவின் மகன் பிரசன்ன குமார் (வயது24) என்பவர் வெளியில் இருந்து தண்ணீர்பாட்டில் கொண்டு வந்தது ஏன் என்று கேட்டு வாக்குவாதம் செய்து, திலீப் கேவட்டை அடித்து, கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இது குறித்து திலிப் கேவட்ட அளித்த புகாரின் பேரில், அன்னூர் போலீசார் உடனடியாக வழக்கு பதிவு செய்து பிரசன்னகுமாரை கைது செய்து, நீதிபதி மோனிகா முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...