கோவையில் கிரிக்கெட் போட்டி நடுவருக்கான இலவச பயிற்சி - நேரடியாக விண்ணப்பிக்கலாம்!

கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் நடுவர்கள் மற்றும் 'ஸ்கோரர்களுக்கான' இலவச பயிற்சி முகாம் மார்ச் மாத இறுதியில் தொடங்க உள்ளது. இதில் பங்கேற்க ஆர்வமுள்ளவர்கள் கோவை நவஇந்தியாவில் உள்ள ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரியில் நேரில் சென்று மார்ச் 20ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.


கோவை: கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில், கிரிக்கெட் 'ஸ்கோரர்' மற்றும் நடுவர்களுக்கான இலவச பயிற்சி முகாம் நடத்தப்பட உள்ளது.

மார்ச் மாதத்தின் கடைசி வாரத்தில் தொடங்கப்பட உள்ள இந்த முகாமில் கிரிக்கெட் ஸ்கோரர்கள் மற்றும் நடுவர்களுக்கான விதிமுறைகள், செயல்முறை உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன. இந்த பயிற்சியின் முடிவில் தேர்வு நடத்தப்பட்டு, மாவட்ட சங்கம் சார்பில் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன.

முகாமில் பங்கேற்க விரும்புவோர், கோவை நவஇந்தியாவில் உள்ள ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரி வளாகத்தில் செயல்பட்டு வரும், கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கத்தில் இருந்து விண்ணப்பங்களை பெற்று கொண்டு, வரும் 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு, கோவை மாவட்ட கிரிக்கெட் சங்க இணை செயலாளர் மகாலிங்கத்தை 97877 40390 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.

Newsletter

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...