கோவையில் சிஆர்பிஎப் பயிற்சி கல்லூரியில் ராணுவ வீரர்கள் சப்-இன்ஸ்பெக்டர்களாக பதவியேற்பு

கோவை ராக்கிபாளையம் பிரிவு சிஆர்பிஎப் பயிற்சி கல்லூரியில் சப்-இன்ஸ்பெக்டர் பயிற்சி முடித்த 19 ராணுவ வீரர்களுக்கு பதவியேற்பு விழா நடைபெற்றது. சி.ஆர்.பி.எப் பயிற்சி கல்லூரியின் ஐ.ஜி மற்றும் முதல்வர் அஜய் பரதன் கலந்துக் கொண்டு வீரர்களின் அணிவகுப்பு, மரியாதை ஏற்றுக்கொண்டு அவர்களுக்கு பேட்சுகளை வழங்கி கெளரவித்தார்.



கோவை: ராக்கிபாளையம் பிரிவு சிஆர்பிஎப் பயிற்சி கல்லூரியில் சப்-இன்ஸ்பெக்டர் பயிற்சி முடித்த 19 ராணுவ வீரர்களுக்கு பதவியேற்பு விழா நடைபெற்றது.

இந்தியா ராணுவம், விமானத்துறை மற்றும் கப்பற்படையில் பணியாற்றி முடித்த 45 வயது பூர்த்தி அடையாத வீரர்கள் மீண்டும் சி.ஆர்.பி.எப்-ல் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து கோவை சி.ஆர்.பி.எப் பயிற்சி கல்லூரியில் 95ஆவது பேட்சில் சப்-இன்ஸ்பெக்டர்களாக சேர 11 ராணுவ வீரர்கள், 5 விமானத்துறை வீரர்கள், 3 கப்பற்படை வீரர்கள் கலந்துக்கொண்டு கடந்த 2 மாதங்களாக பயிற்சி பெற்று வந்தனர்.



பயிற்சி முடித்த அவர்களுக்கு சப்-இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு அளிக்கப்பட்டது. அதற்காக நடைபெற்ற விழாவில், கோவை சி.ஆர்.பி.எப் பயிற்சி கல்லூரியின் ஐ.ஜி மற்றும் முதல்வர் அஜய் பரதன் கலந்துக் கொண்டு வீரர்களின் அணிவகுப்பு, மரியாதை ஏற்றுக்கொண்டு அவர்களுக்கு பேட்சுகளை வழங்கி கெளரவித்தார்.



முன்னதாக கமெண்டண்ட் ராஜேஷ்குமார் உறுதிமொழி வாசிக்க பதவியேற்ற வீரர்கள் தங்கள் கைகளை நீட்டி உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். தொடர்ந்து இந்தியா தேசிய கொடி மற்றும் சி.ஆர்.பி.எப் கொடி முன்பும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.



தொடர்ந்து அவர்களுடன் ஐ.ஜி. குரூப் போட்டோ எடுத்துக்கொண்டார்.



இந்த விழாவில் டி.சி. ராஜேஷ் டாக்ரா, அசிஸ்டண்ட் கமெண்டண்ட் கிசோர்குமார் உட்பட சி.ஆர்.பி.எப் அதிகாரிகள் கலந்துக்கொண்டனர். பதவி ஏற்றுக்கொண்ட 19 சப்-இன்ஸ்பெக்டர்களும் ஜம்மு-காஷ்மீர், சண்டிகர் மற்றும் வடகிழக்கு பகுதிகளில் பணியாற்ற உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...