கோவை ஆட்சியரிடம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 26வது வார்டு கவுன்சிலர் மனு!

பீளமேடு அருகேயுள்ள ரயில்வே மேம்பாலத்திற்கு அடியில் சுரங்கப்பாதை அமைப்பது, PF திட்ட சாலை பணிகளை விரைவு படுத்துவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றி தர வலியுறுத்தி கோவை ஆட்சியரிடம் 26வது வார்டு கவுன்சிலர் சித்ரா வெள்ளியங்கிரி மனு அளித்துள்ளார்.


கோவை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாநகராட்சியின் 26வது வார்டு உறுப்பினர் சித்ரா வெள்ளியங்கிரி, மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.

கோவை மாநகராட்சியின் 26 வது வார்டு கவுன்சிலராக இருப்பவர் சித்ரா வெள்ளியங்கிரி. இவர் இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் கலந்து கொண்டார்.



அப்போது தங்களது வார்டில் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றி தரக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது, பீளமேடு பகுதி 26வது வார்டுக்கு உட்பட்ட ரயில்வே மேம்பாலத்திற்கு கீழ் பகுதியில் சுரங்கப்பாதை வேண்டி பலமுறை மனு அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே சுரங்கப்பாதை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

இதேபோல், அந்த வார்டில் PF திட்ட சாலை பணிகள் நில எடுப்பு நடவடிக்கைக்கு பணிகளை வேகப்படுத்தி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.

உப்பிலிபாளையம் முதல் சின்னியம்பாளையம் வரை நடைபெற்று வரும் மேம்பால பணிகளை வேகப்படுத்தி முடிக்க வேண்டும். சாலையின் இரு புறங்களிலும் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் அனைத்து பேருந்து நிறுத்தங்களிலும் நவீன கழிப்பறை அமைத்து தர வேண்டும்.

உள்ளிட்ட கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றித் தர வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...