இரண்டு ஆண்டுகளில் காற்றாலைகள் மூலம் 20 ஆயிரம் மில்லியன் யூனிட் மின் உற்பத்தி

2022-23ம் நிதியாண்டிலும் தமிழ்நாட்டில் காற்றாலை மின் உற்பத்தி சிறப்பாக உள்ளது. இதுவரை 10 ஆயிரம் மில்லியன் யூனிட்டை கடந்துவிட்டது. மார்ச் இறுதிக்குள் 11 ஆயிரம் மில்லியன் யூனிட் அளவுக்கு மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்.எனக் காற்றாலை மின் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.


கோவை: இரண்டு ஆண்டுகளில் காற்றாலைகள் மூலம் 20 ஆயிரம் மில்லியன் யூனிட் மின் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

அதிகரித்துவரும் மின் தேவையைப் பூர்த்தி செய்வதில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தித்துறை முக்கிய பங்கு வகிக்கிறது. தமிழ்நாட்டில் சூரியஒளி ஆற்றல் உற்பத்தியில் 4,500 மெகாவாட் மற்றும் காற்றாலை துறையில் 10 ஆயிரம் மெகாவாட் மின்உற்பத்தி செய்வதற்கான கட்டமைப்புகள் உள்ளன.

ஆண்டுதோறும் ஏப்ரல் மாதத்தில் தொடங்கி அக்டோபர் மாதம் வரை காற்று சீசன் இருப்பது வழக்கம். கடந்த இரண்டு ஆண்டுகளாக மின் உற்பத்தி சிறப்பாக உள்ளதாக தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்தியக் காற்றாலை மின் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் கஸ்தூரி ரங்கையன் கூறியதாவது, காற்றாலை சீசன் குறிப்பிட்ட ஏழு மாதங்கள் மட்டுமே இருந்தாலும் நிதியாண்டு அடிப்படையில் தான் மொத்த மின்உற்பத்தி கணக்கிடப்படுவது வழக்கம். கடந்த 2021-22 நிதியாண்டில் மொத்தம் 11 ஆயிரம் மில்லியன் யூனிட் அளவிலான மின்சாரம் காற்றாலைகள் மூலம் உற்பத்தி செய்யப்பட்டன.

2022-23ம் நிதியாண்டிலும் தமிழ்நாட்டில் காற்றாலை மின் உற்பத்தி சிறப்பாக உள்ளது. தற்போது வரை 10 ஆயிரம் மில்லியன் யூனிட்டை கடந்துவிட்டது. மார்ச் இறுதிக்குள் கடந்த நிதியாண்டு போல 11 ஆயிரம் மில்லியன் யூனிட் அளவுக்கு மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். மத்திய, மாநில அரசு புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தித்துறைக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருவது மிகவும் வரவேற்கத்தக்கது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...