கோவையில் கல்லூரி மாணவியை கடத்தி சென்ற ஓட்டுநர் போக்சோவில் கைது!

கோவையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வந்த சேலம் மாவட்டத்தை சேர்ந்த 17 வயது மாணவியை ராமேஸ்வரத்திற்கு கடத்திச் சென்ற சாத்தூரை சேர்ந்த ஓட்டுனர் ஞானபிரகாசத்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.


கோவை: கோவையில் கல்லூரி மாணவியை கடத்திச் சென்ற ஓட்டுனரை போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

சேலம் மாவட்டம் ஓமலூர் சேர்ந்த 17வயது மாணவி கோவையை அடுத்த கோவில்பாளையத்தில் உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் விடுதியில் தங்கி முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு கல்லூரியில் இருந்து வெளியே சென்ற மாணவி மீண்டும் கல்லூரிக்கு திரும்பவில்லை என கூறப்படுகிறது.

இதுகுறித்து கல்லூரி நிர்வாகம் அவரது பெற்றோருக்கு தகவல் கொடுத்தனர். இந்த தகவலின் அடிப்படையில் பெற்றோர் கோவில்பாளையம் காவல்நிலையத்தில் மாணவியை காணவில்லை என புகார் அளித்துள்ளனர்.

இந்த புகாரின் அடிப்படையில் கோவில்பாளையம் போலீசார் மாணவியின் செல்போன் மூலம் அவர் தொடர்பு கொண்ட நபர்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். அதில் அவர் சாத்தூரை சேர்ந்த ஓட்டுநர் ஞான பிரகாசம் (27) என்பவரோடு தொடர்பில் இருந்தது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து ஞானப்பிரகாசம், செல்போன் சிக்னலை சோதனை மேற்கொண்டதில் ராமேஸ்வரம் பகுதியில் இருப்பது தெரியவந்தது.



இதனை தொடர்ந்து கோவில்பாளையம் போலீசார் ராமேஸ்வரம் சென்று ஞானபிரகாசத்தை போக்சோ சட்டத்தில் கைது செய்த போலீசார், மாணவியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...