பொள்ளாச்சி பேருந்து நிலைய மொட்டை மாடியிலிருந்து குதித்த இளைஞரால் பரபரப்பு!

பொள்ளாச்சி மத்திய பேருந்து நிலையத்தின் மொட்டை மாடியில் இருந்து மதுபோதையில் கீழே குதித்து படுகாயமடைந்த ராமபட்டினத்தை சேர்ந்த ஜெயசூர்யா என்பவர், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து பொள்ளாச்சி போலீசார் விசாரித்து வருகின்றனர்.


கோவை: பொள்ளாச்சி புதிய பேருந்து நிலையத்தின் மொட்டை மாடியில் இருந்து திடீரென ஒரு இளைஞர் கீழே குதித்தார்.

இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அங்கிருந்த பொதுமக்கள், போலீசாருக்கு தகவல் அளித்தனர்.



சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மேற்கு காவல் நிலைய போலீசார், மதுபோதையில் படுகாயங்களுடன் இருந்த இளைஞரை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.



மதுபோதையில் பேருந்து நிலையத்தின் மொட்டை மாடியில் இருந்து இளைஞர் கீழே குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.



போலீசார் நடத்திய விசாரணையில், அந்த இளைஞர் ராமபட்டினத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்கின்ற ஜெயசூர்யா (வயது19) என்பது தெரிய வந்தது.



எதற்காக மாடியில் இருந்து குதித்து இளைஞர் தற்கொலைக்கு முயன்றார் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...