கோவையில் வடமாநிலத் தொழிலாளர்கள் மீது தாக்குதல் - இந்து முன்னணி பிரமுகர் உட்பட 4 பேர் கைது

கோவையில் நேற்று நள்ளிரவில் டவுன்ஹால், மாகாளியம்மன் கோயில் ரோட்டில் நடந்து சென்ற 4 வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்பட்ட விவகாரத்தில் இந்து முன்னணி அமைப்பை சேர்ந்த சூர்ய பிரகாஷ், பிரகாஷ் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை டவுன்ஹால் பகுதியில் மேற்கு வங்கத்தை பூர்விகமாக கொண்ட கெளதம் தனது நண்பர்களான தன்மாய் ஜானா, ஜாகாத் உள்ளிட்டோருடன் மாகாளியம்மன் கோயில் ரோட்டில் நடந்து சென்றுக் கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியாக வந்த சில நபர்கள், வழி விடமாட்டியா என சொல்லி வடமாநில தொழிலாளர்களை தாக்கினர்.

இந்த நிலையில் மர்ம நபர்களால் சக தொழிலாளிகள் நள்ளிரவில் அடித்து துன்புறுத்தப்பட்டதை தெரிந்துகொண்ட வட மாநில தொழிலாளர்கள் சுமார் 100க்கும் மேற்பட்டோர் அங்கு கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில், வெரைட்டி ஹால் காவல் நிலையத்தில் வடமாநில தொழிலாளர்கள் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் கமிஷ்னர் பாலகிருஷ்ணன், வடமாநில தொழிலாளர்களை தாக்கியவர்களை பிடிக்க உத்தரவிட்டார். அதன்பேரில், 294 பி, 323, 506 உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிந்த போலீசார், நள்ளிரவில் சூர்ய பிரகாஷ், பிரகாஷ், பிரகதீஸ், வேல்முருகன் நான்கு நபர்களை கைது செய்து, அவர்களிடம் விசாரணை நடத்தினர்.

அதில் பிரகதீஸ், வேல்முருகன் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் என்பது தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் கைதான முருகன் என்கிற சூர்ய பிரகாஷ், பிரகாஷ் இந்து முன்னணியில் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் வடமாநில தொழிலாளர்களை தாக்கிய விவகாரத்தில் இந்து முன்னணியை சேர்ந்த இருவர் கைதான நிலையில், இந்து முன்னணி அமைப்பினருக்கு சம்பவத்துக்கும் தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்தில் கோவை போலீசார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...