வெள்ளகோவில் மதுக்கடைக்கு எதிர்ப்பு - திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் குளிர்சாதன மதுக்கடைக்கு எதிர்ப்புத் தெரிவித்து திமுக கவுன்சிலர் செல்வராஜ் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது. குடியிருப்பு பகுதியில் மதுக்கடை அமைக்க கூடாது என்று வலியுறுத்தப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலில் புதிய பேருந்து நிலையம் அருகே அரசு மதுபானக்கடை செயல்பட்டு வந்த நிலையில், கடந்த 15 மாதங்களுக்கு முன்பு பொதுமக்களின் போராட்டத்தை அடுத்து அங்கிருந்த கடை அகற்றப்பட்டது.



இந்நிலையில் தற்போது அதேபகுதியில் நவீன குளிர்சாதன வசதியுடன் மதுக்கடை திறப்பதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.



இந்நிலையில், மதுக்கடை அமையும் இடத்தின் அருகே அரசு துவக்கப்பள்ளி, பேருந்து நிலையம், டிஆர் நகர் குடியிருப்புகள் நிறைந்த பகுதியாக உள்ளதால், அந்த இடத்தில் மதுபானக்கடை அமைக்க கூடாது என வெள்ளகோவில் நகராட்சி 5வது வார்டு திமுக கவுன்சிலர் செல்வராஜ் தலைமையில் 50‌க்கும் மேற்பட்ட அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.



மதுக்கடைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆளுங்கட்சியின் கவுன்சிலர் தலைமையில் பொதுமக்கள் ஆட்சியரிடம் புகார் மனு அளித்ததால் ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Newsletter

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...