கோவையில் வடமாநிலத் தொழிலாளர்கள் மீது தாக்குதல் - போலீசார் விசாரணை

கோவை டவுன்ஹால் பகுதியில் வட மாநில தொழிலாளர்களை மர்ம நபர்கள் தாக்கிய நிலையில், அப்பகுதியில் நள்ளிரவில் நூற்றுக்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.



கோவை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே வட மாநில தொழிலாளர்களை தாக்குவது போன்ற வீடியோ, பதிவுகள் சமூகவலைதளங்களில் பரவின. இந்தப் பொய்யான குற்றச்சாட்டுக்கு தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுத்து, இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தது.



வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு திரும்புவதாக வெளியான தகவல்களை அடுத்து, அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, காவல்துறை பாதுகாப்பு அளிக்கின்றது.



இந்த நிலையில், கோவை டவுன்ஹால் பகுதியில் வட மாநில தொழிலாளர்களை மர்மநபர்கள் அடித்ததாக தகவல் பரவியது.

இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்ககோரி வெரைட்டி ஹால் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. வடமாநில தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு தருவதாக போலீசார் உறுதியளித்தனர்.

மேலும், வடமாநிலத் தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்திய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.



வடமாநிலத் தொழிலாளர் தாக்கப்பட்டதாக கிடைத்த தகவலையடுத்து, நள்ளிரவில் நூற்றுக்கும் மேற்பட்ட வடமாநிலத் தொழிலாளர்கள் அங்கு கூடியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...