பயம், பதட்டமின்றி நம்பிக்கையுடன் எதிர்கொள்ளுங்கள்..! - கோவை எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் வாழ்த்து

கோவை உட்பட தமிழகம் முழுவதும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகள் என்று கோவை தெற்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.


கோவை: பாஜக மகளிரணி தேசியத் தலைவரும், கோவை தெற்கு சட்டமன்றத் உறுப்பினர் வானதி சீனிவாசன் வாழ்த்துச் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் கூறியுள்ளதாவது:

தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கு இன்று 12-ம் வகுப்பு பொது தேர்வு தொடங்குகிறது. தேர்வு எழுதும் மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

12-ம் வகுப்பு பொதுத்தேர்வு என்பது, மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் மிக முக்கியமான காலகட்டம். இந்த பொதுத் தேர்வு, தனிப்பட்ட மாணவரின் எதிர்கால மட்டுமல்ல, நாட்டின் எதிர்காலமும் கூட. இது நவீன தொழில்நுட்ப யுகம்.

ஒவ்வொரு மாணவரிடமும் புதைந்து கிடக்கும் திறனுக்கேற்ப படிப்புகளும், வேலை வாய்ப்புகளும் கொட்டிக் கிடக்கின்றன. எனவே, பயம், பதட்டமின்றி தன்னம்பிக்கையுடன் தேர்வை எதிர்கொள்ளுங்கள். 12-ம் வகுப்பு தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களுக்கும் நல்ல வளமான எதிர்காலம் அமைய வாழ்த்துகிறேன். இவ்வாறு வானதி சீனிவாசன் குறிப்பிட்டுள்ளார்.

Newsletter

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...