உடுமலை அருகே வீடு தீப்பிடித்து எரிந்து சேதம் - பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் நாசம்

உடுமலை அருகேயுள்ள சடையகவுண்டன் புதூரில் மின்கசிவு காரணமாக வீடு ஒன்று தீப்பிடித்து எரிந்ததில், பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் மற்றும் ரூ.1.50 லட்சம் ரொக்கம் உள்ளிட்டவை எரிந்து நாசமானது.


திருப்பூர்: உடுமலை அருகே மின்கசிவு காரணமாக வீடு ஒன்று தீப்பிடித்து எரிந்து நாசமானது.



திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள அந்தியூர் ஊராட்சிக்கு உட்பட்ட சடைய கவுண்டன் புதூரில் லட்சுமணன் (55) என்பவர் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்த நிலையில் லட்சுமணன் குடும்பத்துடன் வெளியூரில் உள்ள கோவில் திருவிழாவுக்குச் சென்றார்.



இன்று காலையில் திரும்பி வந்து பார்த்த போது வீடு முழுவதும் எரிந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.



பின்னர் உள்ளே சென்று பார்த்த பீரோவில் வைத்திருந்த வீட்டுப் பத்திரம் உள்ளிட்ட ஆவணங்கள், இரு சக்கர நான்கு சக்கர வாகனம், ரூ.1.50 லட்சம் ரொக்கம் ஆகியவை எரிந்து சேதமானது.

புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில், மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகின்றது. இருப்பினும் உடுமலை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீ விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...