கோவையில் ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சி - பார்வையாளர்களை வியக்க வைத்த குழந்தைகள்

கோவையில் தனியார் அமைப்பு சார்பில் “யாதுமாகி நின்றவள்” என்ற தலைப்பில் நடைபெற்ற ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சியில், ஒய்யார நடைபோட்ட குழந்தைகள் காண்போரை வியப்பில் ஆழ்த்தினர்.



கோவை: கோவையில் தனியார் அமைப்பு சார்பில் நடைபெற்ற ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சியில், ஒய்யார நடைபோட்ட குழந்தைகள் காண்போரை வியப்பில் ஆழ்த்தினர்.

கோவையில் இயங்கி வரும் ஃபேஷன் ஆர்ட் இன்ஸ்ட்டியூட் என்ற தனியார் அமைப்பு, பெண் தொழில் முனைவோர்களுக்கு ஊக்கமளித்து வருகிறது.

பெண்களுக்கான ஆடை தயாரிக்கும் பயிற்சி வகுப்புகளை நடத்தி வரும் இந்த அமைப்பு மூன்றாவது ஆண்டாக "யாதுமாகி நின்றவள்" எனும் தலைப்பில் பெண்களுக்கான ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சியை கோவை சரவணம்பட்டி வணிக வளாகத்தில் நடத்தியது.



இதில் பெண்கள் தங்களது முயற்சியில் தயாரித்த ஆடைகளை அவர்களது குழந்தைகளுக்கு அணிவித்து அணிவகுப்பில் பங்கேற்க வைத்தனர்.



இதில் வண்ணமயமான ஆடைகளை அணிந்து வந்த குழந்தைகள், ஒய்யார நடைபோட்டது பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியது.



மேலும் இதில் கலந்து கொண்ட அனைத்து குழந்தைகளுக்கும் பரிசுகளும் வழங்கப்பட்டன.

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...