அண்ணமலை உள்ளிட்ட பாஜகவினர் மீதான ஊழல் பட்டியலை சேகரித்து வெளியிட தயார்-ரேஸ்கோர்ஸ் ரகுநாத் தகவல்!

திமுக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் மீது தொடர்ந்து அவதூறு குற்றச்சாட்டுகளை கூறி வரும் பாஜக தலைவர் அண்ணாமலை, நடிகை குஷ்பு உள்ளிட்டோரை கைது செய்ய வேண்டும் என திரைப்பட இயக்குனரும், திமுக பிரமுகருமான ரேஸ்கோர்ஸ் ரகுநாத் தெரிவித்துள்ளார்.


கோவை: திமுக அரசு மற்றும் முதல்வர், தமிழக அமைச்சர்கள் குறித்து அவதூறான கருத்துகளை பரப்பி வரும் பாஜக தலைவர் அண்ணாமலை, குஷ்பு உள்ளிட்டோரை கைது செய்ய வேண்டும் என திரைப்பட இயக்குநரும் திமுக பிரமுகருமான ரேஸ்கோர்ஸ் ரகுநாத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது, திமுக அரசு மற்றும் மக்களால் தேர்தெடுக்கப்பட்ட முதல்வர் முக.ஸ்டாலின் குறித்தும், அமைச்சர்கள் குறித்து அவதூறு கருத்துகளை பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டு வருகிறார்.

இது குறித்து ஏற்கனவே காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளேன், அதுவும் விசாரணையில் உள்ளது. இந்நிலையில் தொடர்ந்து அவதூறு பரப்பி வரும் அண்ணாமலை மற்றும் சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தேவையற்ற தவறான கருத்துக்களை பேசிய மகளிர் ஆணைய தலைவர் குஷ்பு ஆகிய இருவரையும் கைது செய்ய வேண்டும்.

குறிப்பாக அண்ணாமலை, முடிந்தால் கைது செய்து பாருங்கள் என அரசுக்கு சவால் விடுக்கிறார். அதே போல தமிழக அமைச்சர்களையும் தரக்குறைவாக பேசுகிறார் அது ஏற்புடையது அல்ல. தமிழக அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வெளியிடுவேன் என கூறுகிறார்.

இவர் கடந்த ஒரு வருடமாக இதை தான் கூறி வருகிறார். ஊழல் செய்தால் தானே ஆதாரம் இருக்கும். பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் அவர்கள் கட்சியை சேர்ந்த அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் மீதான ஊழல் குறித்தான ஆதரங்களை சேகரித்து வெளியிட தயார். திமுக அரசு மற்றும் அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை கூற அண்ணாமலைக்கு எந்த தகுதியும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...