சிகிச்சை பெற்று வரும் கோவை மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் - நேரில் சந்தித்து நலம் விசாரித்த முதல்வர்!

கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவ சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து, உடல் நலம் குறித்து விசாரித்தார்.


கோவை: உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வரும் கோவை மாகர் மாவட்ட செயலாளரை முதலமைச்சர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இன்று கோவைக்கு வருகை புரிந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காலை கட்சி நிகழ்ச்சியிலும் மாலை விசைத்தறி உரிமையாளர்கள் ஏற்பாடு செய்த நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியிலும் பங்கேற்று உரையாற்றினார்.

இதனை தொடர்ந்து மருத்துவ சிகிச்சை பெற்று வரும் கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான நா.கார்த்திக்கை அவரது இல்லத்திற்கு நேரில் சென்று சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்தார்.

இந்நிகழ்வில் அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, முத்துசாமி, காந்தி, கயல்விழி செல்வராஜ் உள்ளிட்டோர் உடனிருந்து, அவரது உடல் நலம் குறித்து விசாரித்தனர்.

Newsletter

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...