வடமாநில தொழிலாளர்கள் அதிகம் பணியாற்றும் விசைத்தறி துறையை சிலர் ஒழிக்க முயற்சி - கொங்கு ஈஸ்வரன் காட்டம்

தமிழ்நாட்டின் வளர்ச்சி கண்டு பொறுக்க முடியாத சிலர், வடமாநிலத்தவர்கள் அதிகம் பணியாற்றும் விசைத்தறி துறையை ஒழிக்கும் நோக்கில், வடமாநிலத்தவர்கள் தொடர்பாக வதந்தியை பரப்பியுள்ளதாக கொங்கு ஈஸ்வரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.


கோவை: வடமாநில தொழிலாளர்கள் அதிகமாக பணிபுரியும் விசைத்தறித்துறையை ஒழிக்க சிலர்முயற்சித்து வருகின்றனர் என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கோவை கருமத்தம்பட்டி பகுதியில் தமிழ்நாடு விசைத்தறி கைத்தறி நெசவாளர்கள் சங்கம் சார்பில் முதலமைச்சருக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான ஈஸ்வரன் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்வில் அவர் பேசியதாவது, முதலமைச்சர், தன்னை நோக்கி வருகின்ற விமர்சனங்கள், பாராட்டுக்கள் அனைத்தையும் ஒரே மாதிரியாக எடுத்துக்கொண்டு தன்னை முன்னிறுத்தாமல் தமிழ்நாட்டை முன்னிறுத்துகின்ற பண்பு தான் தமிழ்நாட்டில் இந்த 22 மாதகால வளர்ச்சிக்கான காரணமாக அமைந்துள்ளது.

இந்தப் பகுதி விசைத்தறி, கைத்தறி நிறைந்த பகுதி. தற்போது முதல்வர் விசைத்தறி, கைத்தறிகளுக்கு அறிவித்துள்ள அறிவிப்பை ஒப்பிட்டு பார்க்கும் பொழுது மின்கட்டண உயர்வு என்பதே கிடையாது. மேலும் இந்நிகழ்வில் ஒருவரை கூட கட்சி சார்ந்து அமர வைக்கவில்லை.

இங்கு அனைத்து கட்சியை சேர்ந்தவர்களும் இருக்கிறார்கள் அவர்களும் விசைத்தறி, கைத்தறி தொழிலாளர்கள் தான். கொங்கு மண்டலத்தை பொறுத்தவரை விசைத்தறி ஒரு கண் என்று சொன்னால் விவசாயம் மற்றொரு கண்.

இவை இரண்டையும் காப்பாற்றும் பணியை முதலமைச்சர் கையில் எடுத்து செயல்பட்டு வருகிறார். மேலும் வடமாநில தொழிலாளர்கள் அதிகமாக பணியாற்றும் இந்த துறையை ஒழிப்பதற்கு சிலர் முயற்சிக்கின்றனர்.

அதற்கு காரணம், தமிழ்நாட்டினுடைய வளர்ச்சியை பார்த்து பொறாமை, தமிழ்நாடு கடந்த 10 ஆண்டுகளாக இருந்த நிலையை மாற்றி சீராகிறது என்று பொறுக்க முடியாதவர்கள் இந்த வட மாநிலர் பிரச்சனையை கிளப்பி உள்ளனர். வதந்தியை பரப்பியுள்ளனர்.

விசைத்தறிக்கு இருக்கின்ற சலுகைகளை ஆட்டோ ரூமிற்கும் தர வேண்டும். சோமனூர் பகுதியில் ஜவுளி சந்தை வேண்டுமென்ற 50 ஆண்டு கால கோரிக்கையையும் பரிசீலிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்தார்.

மேலும் விசைத்தறிகளுக்கு சோலார் பொருத்தப்படும் போது கிடைக்க வேண்டிய சலுகைகளையும் தருவதற்கு முதலமைச்சர் பரிசீலிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Newsletter

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...