திருப்பூரில் மாநில அளவிலான காதி மற்றும் கிராம தொழில் ஆணைய கண்காட்சி - தொடங்கி வைத்த எம்.எஸ்.எம்.இ தலைவர்!

திருப்பூர் அடுத்த வாலிபாளையம் அருகேயுள்ள தனியார் மண்டபத்தில் காதி மற்றும் கிராம தொழில்கள் ஆணையம் சார்பில் மாநில அளவிலான கண்காட்சி இன்று தொடங்கி மார்ச் 20ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த கண்காட்சியை எம்.எஸ்.எம்.இ ஆணைய தலைவர் மனோஜ் குமார் தொடங்கி வைத்தார்.



திருப்பூர்: திருப்பூரில் காதி மற்றும் கிராம ஆணையத்தின் மாநில அளவிலான கண்காட்சியை எம்.எஸ்.எம்.இ ஆணைய தலைவர் மனோஜ் குமார் இன்று துவக்கி வைத்தார்.



திருப்பூர் மாவட்டம் வாலிபாளையம் சாலையில் உள்ள ஹார்வி குமாரசாமி திருமண மண்டபத்தில் காதி கண்காட்சி இன்று முதல் வரும் 20 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த கண்காட்சியில் 50 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இதன் துவக்க விழா நிகழ்ச்சியில் எம்.எஸ்.எம்.இ ஆணைய தலைவர் மனோஜ் குமார் கலந்து கொண்டு, கண்காட்சியை ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். அதனை தொடர்ந்து கண்காட்சியை நேரில் பார்வையிட்டார்.

இதனை தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில், பிரதம மந்திரியின் பி.எம்.இ.ஜி.பி திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு தொழில் துவங்க உதவித்தொகை வழங்கப்பட்டது.



இந்த விழாவில் துணை ஆட்சியர் ஸ்ருதன் ஜெய் நாராயணன், தலைமை நிர்வாக அதிகாரி ஆர்.எஸ்.பாண்டே, இயக்குனர் ரித்தேஷ் குமார், மாநில இயக்குனர் பி.என். சுரேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...