நீலகிரியில் இருந்து கர்நாடகாவிற்கு யானை தந்தம் கடத்திய மூன்று பேர் கைது


நீலகிரி மாவட்டம் சேரம்பாடியில் இருந்து யானை தந்தங்களை கடத்தி வருவதாக கர்நாடக மாநில குண்டல் பேட்டை காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

அதன் அடிப்படையில், அவ்வழியாக வந்த காரை சோதனையிட்ட குண்டல்பேட்டை காவல் துறையினர் ஒரு காரில் சுமார் 5 லட்சம் ரூபாய் மதிப்புடைய யானை தந்தங்கள் கடத்தி வரப்பட்டதை கண்டறிந்தனர்.

இதைத்தொடர்ந்து, இக்கடத்தலில் ஈடுபட்ட சேரம்பாடியைச் சேர்ந்த சோமன் (50), எருமாடு பகுதியைச் சேர்ந்த மோகன் குஞ்சான் (45), கேரள மாநிலம் திருசூர் சேர்ந்த ஸ்டீபன் (44) ஆகிய மூன்று பேரையும் குண்டல்பேட்டை காவல் ஆய்வாளர் பிரமோத் குமார், புலனாய்வு குழு மற்றும் சிறப்பு அதிரடிப்படை நாகராஜ் ஆகியவர்கள் சுற்றி வழைத்து பிடித்தனர்.

இதைத்தொடர்ந்து, அவர்களிம் இருந்து 3 யானை தந்தம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஒரு கேரள பதிவு எண் கொண்ட மாருதி கார் ஆகியவை பரிமுதல் செய்யப்பட்டது.

இதில், சோமன் என்பவர் கடந்த 2014 ஆம் ஆண்டு கல்லத்தனமாக துப்பாக்கி வைத்திருந்ததாக குண்டல்பேட்டை காவல் துணை கண்காணிப்பாளர் கோபி அவர்களால் கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...