பெண்களின் பாதுகாப்புக்கு கல்வி மிகவும் அவசியம்..! - முன்னாள் காவல்துறை அதிகாரி கலியமூர்த்தி பேச்சு

உடுமலை அருகே பெதப்பம்பட்டியில் புதிய பள்ளி துவக்க விழாவில் பங்கேற்ற முன்னாள் காவல்துறை அதிகாரி கலியமூர்த்தி, சாதி மத பேதங்கள் இல்லாமல் அனைவரும் ஒன்றாய் இருப்பதற்கு கல்வி ஒரு முக்கிய காரணம். மொத்தத்தில் கல்வி ஏழைகளுக்கு செல்வம், பெண்களுக்கு பாதுகாப்பு என்று தெரிவித்தார்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள பெதப்பம்பட்டியில் ஆர்.ஜி இன்டர்நேஷனல் பப்ளிக் ஸ்கூல் புதிய பள்ளி துவக்க விழா நடைபெற்றது.



இந்த விழாவில் ராஜலட்சுமி கெங்குசாமி அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் ரவீந்திரன் கெங்குசாமி, புதிய பள்ளி கட்டடத்தை திறந்து வைத்தார். சிறப்பு விருந்தினராக முன்னாள் காவல்துறை கண்காணிப்பாளர் கலியமூர்த்தி கலந்து கொண்டார்.

விழாவில் கலியமூர்த்தி பேசியதாவது,



இன்றைய காலங்களில் கல்வியை விட உதவி செய்ய யாரும் துணை இல்லை. ஒவ்வொரு மனிதனின் உண்மையான வளர்ச்சி எதுவென்றால் அது கல்விதான். நிலையாக இருப்பது கல்விதான். உதாரணமாக என்னிடம் உள்ள காக்கி உடை தற்பொழுது இல்லை. நான் வாங்கிய பதக்கங்கள் இல்லை. ஆனால் கல்வி மட்டும் என்னிடம் உள்ளது.



சாதி மத பேதங்கள் இல்லாமல் அனைவரும் ஒன்றாய் இருப்பதற்கு கல்வி ஒரு முக்கிய காரணம். மொத்தத்தில் கல்வி ஏழைகளுக்கு செல்வம், பெண்களுக்கு பாதுகாப்பு, வீட்டிற்கும், நாட்டிற்கும் நன்மை. ஆகையால் அனைவரும் கல்வி கற்க வேண்டும். கல்வி இல்லையெனில் இவ்வுலகில் ஒவ்வொரு தனி மனிதனும் வாழ்வில் முன்னேற முடியாது என்று கூறினால் அது மிகையாகாது.

இவ்வாறு அவர் பேசினார்.

புதிய பள்ளி கட்டிட திறப்பு விழாவில் ஆரண்ய அறக்கட்டளை தலைவர் நந்தினி ரவீந்திரன் மற்றும் உடுமலை ஆர்.வி.ஜி. பள்ளி செயலாளர் கார்த்திகேயன், பெதப்பம்பட்டி ஆர்.வி.ஜி. பள்ளி முதல்வர், முக்கிய பிரமுகர்கள் மற்றும் பெற்றோர்கள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்

Newsletter

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...