உடுமலையில் ரூ.12 ஆயிரம் மதிப்புள்ள மளிகைப் பொருட்கள் வாங்கி தப்பியோட்டம்! - போலீசார் விசாரணை

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் மளிகை கடையில் கோயில் விழாவிற்கு தேவைப்படுவதாக கூறி ரூ.12 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை வாங்கி, பணம் கொடுக்காமல் பொருட்களோடு தப்பிய நபரை சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் போலீசார் தேடிவருகின்றனர்.



திருப்பூர்: உடுமலை கபூர்கான் வீதியில் மளிகை கடை நடத்தி வருபவர் ஸ்டாலின். இவரது கடைக்கு வந்த ஒருவர், ஆதிபராசக்தி கோயிலில் அன்னதானம் செய்வதற்கு மளிகை பொருட்கள் வாங்க வந்ததாக கூறியுள்ளார்.



இதையடுத்து, அவர் கொடுத்த லிஸ்ட்படி அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் என ரூ.12 ஆயிரம் மதிப்பிலான பொருட்களை ஒரு வாடகை ஆட்டோவில் ஏற்றி, ஆண்டாள் சீனிவாசன் லேஅவுட் பகுதியில் உள்ள கோயிலுக்கு கொண்டு சென்றார்.

அங்கு பொருட்களை இறக்கி வைத்த அந்த நபர், மேலும் சில பொருட்களை தேவைப்படுவதாகவும், அவற்றை கொண்டு வந்து கொடுத்துவிட்டு, மொத்தமாக பணத்தை பெற்றுக் கொள்ளுமாறும் கூறியுள்ளார். இதையடுத்து, மளிகைக் கடைக்காரரும் கடைக்குச்சென்று பொருட்களை எடுத்துக்கொண்டு கோயிலுக்கு வந்தார்.



ஆனால், அங்கே அந்த நபரை காணவில்லை. மளிகைப் பொருட்களையும் காணவில்லை. கோயிலில் இருந்தவர்களிடம் விசாரித்தபோது, வேறு சில கோயில்களுக்கு பொருட்களை பிரித்து கொடுத்துவிட்டு வருவதாக காரில் ஏற்றி சென்றதாக கூறியுள்ளனர். ஆனால், எங்கு தேடியும் அந்த நபரை காணவில்லை.



அதிர்ச்சி அடைந்த ஸ்டாலின் இதுபற்றி உடுமலை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் வழக்கு பதிந்து நூதன முறையில் மளிகை பொருட்களை திருடிய டிப்டாப் ஆசாமியை சி.சி.டி.வி காட்சிகளை கொண்டு தீவிரமாக தேடி வருகின்றனர்.

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...