ஜெயலலிதாவின் 75வது ஆண்டு பிறந்தநாள் கொண்டாட்டம் - தாராபுரத்தில் அதிமுக பொதுக்கூட்டம்

தாராபுரத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய மடத்துக்குளம் எம்எல்ஏ மகேந்திரன், இடைக்கால பொதுச்செயலாளராக உள்ள எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளராக விரைவில் அறிவிக்கப்படுவார் என்று தெரிவித்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் மறைந்த முன்னாள் முதல்வா் ஜெ. ஜெயலலிதாவின் 75-ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம், கொண்டரசம்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்றது.



திருப்பூர் அஇஅதிமுக புறநகர் கிழக்கு மாவட்டம் தாராபுரம் ஒன்றியத்தின் சாா்பில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு, மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினரும் திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் சி.மகேந்திரன் தலைமை தாங்கினார்.



அதிமுக மேற்கு, தெற்கு, கிழக்கு ஒன்றியச் செயலாளா்கள் செய்யார் டி.ஆர். பாலகுமாரன், டி. ரமேஷ், கே, செல்வகுமார், ஆகியோர் முன்னிலை வகித்தாா்.

பொதுக் கூட்டத்தில் மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் மகேந்திரன் பேசியதாவது:



கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை மறைந்த அம்மாவின் அரசு வழங்கியது. பள்ளி படிக்கும் மாணவர்களுக்கு மடிக்கணினி, பெண்களுக்கு தாலிக்கு தங்கம், ஏழைக் குடும்பங்களுக்கு கறவை மாடு ஆடு கோழி மிக்ஸி கிரைண்டர் உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்களை வழங்கி வந்தோம். ஆனால், திமுக அரசு அனைத்து அம்மா செயல்படுத்தி வந்த நல்ல திட்டங்களையும் நிறுத்திவிட்டது.



திமுக அரசு தேர்தல் வாக்குறுதியில் கொடுத்ததுபோல குடும்பத் தலைவிக்கு ரூபாய் ஆயிரம் தருவதாக கூறி அதை நிறைவேற்றவில்லை. நகைக்கடன் தள்ளுபடியில் பல்வேறு முறைகேடுகளை செய்துள்ளது. பொங்கல் பரிசு தொகுப்பில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன. வேட்டி சேலை வழங்கும் திட்டத்தில் இன்னும் பொது மக்களுக்கு வேட்டி சேலை வழங்கவில்லை. இடைக்கால பொதுச்செயலாளராக உள்ள எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளராக விரைவில் அறிவிக்கப்படுவார்.



அம்மாவின் ஆட்சி அமைய தொண்டர்கள் களப்பணி ஆற்ற வேண்டும். வருகின்ற 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாண்டிச்சேரி உட்பட 40 பாராளுமன்ற தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற தொண்டர்கள் பாடுபட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார். இந்த நிகழ்ச்சியில் நகர ஒன்றிய பேரூர் கழக கிளைக் கழக வார்டு கழக நிர்வாகிகள் உட்பட 500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...