கோவையில் கஞ்சா வியாபாரிகள் 2 பேர் கைது - செல்போன், கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல்

கோவை, குனியமுத்தூர் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுவந்த அசாருதீன், சர்புதீன் என இருவரை போலீசார் கைது செய்து, கஞ்சா பொட்டலங்கள், இரண்டு செல்போன்கள் பறிமுதல் செய்தனர். மேலும் முஜிபுர் ரஹ்மான் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.


கோவை: கோவை மாநகர பகுதிகளில் கஞ்சா புழக்கத்தை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் உத்தரவின் அடிப்படையில் அமைக்கப்பட்ட தனிப்படை போதைப் பொருள் வியாபாரிகளை கைது செய்து சிறையில் அடைத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கோயம்புத்தூரில் இரண்டு கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர்.

கோவை குனியமுத்தூர் உயர்நிலைப்பள்ளி பின்புறம் குறிச்சிகுளம் அமைந்துள்ளது. குளக்கரை அருகே அரசு உயர்நிலை பள்ளி ஒன்றும் இயங்கி வருகிறது. பள்ளியின் பின்புறம் சிலர் கஞ்சா விற்பதாக குனியமுத்தூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் அங்கு கஞ்சா விற்று வந்த இருவரை பிடித்தனர்.

காவல்துறை விசாரணையில், இருவரும் பிஸ்மி நகரைச் சார்ந்த அசாருதீன் (வயது30), லவ்லி கார்டன் பகுதியைச் சார்ந்த சர்புதீன் (வயது32) என்பது தெரியவந்தது. ஓட்டுநராக இவர்கள் பணியாற்றி வரும் நிலையில், கஞ்சா வியாபாரத்திலும் ஈடுபட்டுவந்தது உறுதியானது. இதில் அசாருதீன் மீது ஏற்கனவே பந்தய சாலை மற்றும் பஜார் காவல் நிலையங்களில் போதை பொருள் விற்றதாக வழக்குகள் உள்ளன.

இந்த நிலையில், இவர்களுக்கு கஞ்சா பொட்டலங்களை மொத்தமாக தந்து வியாபாரத்தில் ஈடுபடுத்தி வரும் முஜிபுர் ரஹ்மான் என்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர். தற்போது கைதான நபர்களிடமிருந்து கஞ்சா பொட்டலங்கள், இரண்டு செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கஞ்சா வியாபாரிகளுக்கு எதிரான வேட்டை தீவிரப்படுத்தப்படும் என கோவை போலீசார் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...