தாராபுரத்தில் பி.ஏ.பி வாய்க்கால் பாசன பகிர்மானக்குழு நிர்வாகிகள் தேர்வு - போட்டியின்றி தேர்வான தலைவர்

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் காங்கேயம், குண்டடம் பி.ஏ.பி. வாய்க்கால் பாசன பகிர்மான குழு தலைவர்களுக்கான தேர்தல் நடைபெற்றது. இதில், தலைவராக பாலசுப்பிரமணியம் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் காங்கேயம், குண்டடம் ஆகிய பி.ஏ.பி. கால்வாய் பகிர்மான குழு தலைவர்களுக்கான தேர்தல் தாராபுரம் ஆர்.டி.ஓ அலுவலகத்தில் நடைபெற்றது.

தேர்தலை ஆர்.டி.ஓ.வும், தேர்தல் அதிகாரியுமான குமரேசன் தேர்தலை நடத்தினார். அதில், காங்கேயம் பகிர்மான குழு தலைவராக பச்சாபாளையத்தை சேர்ந்த கிராம தலைவர், பாலசுப்பிரமணியம் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.



அதேபோல் குண்டடம் பி.ஏ.பி கால்வாய் பகிர்மான குழு தலைவராக சடையபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் ஈஸ்வரன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இவர்களுடன் பி.ஏ.பி கால்வாய் பகிர்மான குழு உறுப்பினர்களாக 10 உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். தேர்வு செய்யப்பட்ட அனைவருக்கும் ஆர்.டி.ஓ குமரேசன் வெற்றிபெற்றதுக்கான சான்றிதழ்களை வழங்கினார்.



தேர்வு செய்யப்பட்ட தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு காங்கேயம், தாராபுரம் பகுதியில் உள்ள நகர, ஒன்றிய தி.மு.க. நிர்வாகிகள் மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். அப்போது, மாவட்ட துணை செயலாளர் முத்துக்குமார், வெள்ளகோவில் நகரச்செயலாளர் முருகானந்தம், ஒன்றிய செயலாளர் சந்திரசேகர், காங்கயம் நகர செயலாளர் வசந்தம். சேமலையப்பன், காங்கயம் தெற்கு ஒன்றிய செயலாளர் சிவானந்தம், வடக்கு ஒன்றிய செயலாளர் கருணை பிரகாஷ், தாராபுரம் நகர செயலாளர் முருகானந்தம், குண்டடம் ஒன்றிய செயலாளர் சந்திரசேகர் உள்ளிட்ட விவசாயிகள் மற்றும் கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்துகொண்டனர்.

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...