கோவை விமானநிலையத்தில் கடத்தல் தங்கம் பறிமுதல் - கள்ளக்குறிச்சி நபர் கைது

சார்ஜாவிலிருந்து விமானம் மூலம் சட்ட விரோதமாக கடத்திவரப்பட்ட ரூ-3.8 கோடி மதிப்பிலான தங்கத்தை வருவாய் புலனாய்வு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த அர்ஜூன் என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.


கோவை: சார்ஜாவில் இருந்து கோயம்புத்தூருக்கு ஏர்அரேபியா விமானம் வந்தது. அதில் சிலர் தங்கம் கடத்திவருவதாக வருவாய் புலனாய்வு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில் நுண்ணறிவு மற்றும் வருவாய் புலன் ஆய்வு துறை அதிகாரிகள் விமானத்தில் பயணித்து வந்த பயணிகளை சோதனையிட்டனர்.

அப்போது 11 பயணிகள் அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதலான தங்கத்தை கொண்டுவந்திருப்பது தெரியவந்தது.

அந்த வகையில் ஷூ, ஜீன்ஸ் பேண்ட் உள்ளிட்டவற்றில் மறைத்துக் கொண்டு வரப்பட்ட 6.62 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் ஒட்டுமொத்த மதிப்பு 3.8 கோடி ரூபாய் ஆகும்.

தங்கம் கடத்தப்பட்ட விவகாத்தில் கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த அர்ஜுன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மற்றவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

பறிமுதல் செய்யப்பட்ட தங்கம் பெரும்பாலும் தங்க சங்கிலிகளாகவே கடத்தி வரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Newsletter

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...