கோவை வேலாண்டிபாளையத்தில் மருவூர் புற்றுக்கண் மாரியம்மன் கோயிலில் நடந்த பூஜையின்போது, அம்மன் காலடியில் நாகபாம்பு படமெடுத்து நின்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவிவருகிறது.
கோவை: கோவை தடாகம் சாலை வேலாண்டிப்பாளையம் பகுதியில் மருவூர் புற்றுக்கண் மாரியம்மன் கோயில் உள்ளது. இங்கு புற்றின் முன்பு மாரியம்மன் சிலை வைக்கப்பட்டுள்ளது.
அப்பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற இந்த கோயிலில் வெள்ளிக்கிழமையான நேற்று மாலை சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அப்போது அங்கு வந்த ஒரு நாகபாம்பு ஒன்று அம்மன் காலடியில் படமெடுத்து நின்றது.
இதனை கண்ட அங்கிருந்த பக்தர்கள் ஆச்சரியமும் அதிர்ச்சியும் அடைந்ததோடு, அவர்களது செல்போனில் படமெடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வைரலாக்கி வருகின்றனர்.