காய்ச்சல், தலைவலி பாதிப்பு அதிகரிப்பு - வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் நடமாடும் மருத்துவ முகாம்

வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் காய்ச்சல், தலைவலி, இருமல் அதிகரித்ததை தொடர்ந்து, வால்பாறை, உருளிகல், கக்கன் காலனி உள்ளிட்ட பகுதிகளில் நடமாடும் மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் பொதுமக்களுக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை, காய்ச்சல், இருமல், தலைவலி போன்ற நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.



கோவை: வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் நடமாடும் மருத்துவ முகாம் நடைபெற்றது.

கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டாரத்தில் 62 எஸ்டேட் பகுதி உள்ளது. இங்குள்ள பொதுமக்கள் சிகிச்சை பெறுவதற்காக வால்பாறை, சோலையார் அணை பகுதியில் சுகாதார மையங்கள் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை காய்ச்சல் மற்றும் தலைவலி, இருமல் போன்ற அறிகுறிகளுடன் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.



இதை கட்டுப்படுத்தும் நோக்கில் நடமாடும் மருத்துவமனை சார்பில், வால்பாறை, கக்கன் காலனி, உருளிகல் ஆகிய மூன்று இடங்களில் மருத்துவ முகாம் நடைபெற்றது.



வால்பாறை வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் டாக்டர் சாமிநாதன் தலைமையிலும், கக்கன் காலனி பகுதியில் சித்தா டாக்டர் முத்துக்குமாரசாமி தலைமையிலும், உருளிகல் எஸ்டேட் பகுதியில் டாக்டர் பாபு லட்சுமணன் தலைமையிலும் மருத்துவக் குழுவினர் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தனர்.



இந்த முகாமில் ரத்த அழுத்தம், சர்க்கரை, காய்ச்சல், இருமல், தலைவலி போன்ற நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

Newsletter

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...