திருப்பூரில் சாக்கடை கால்வாய் பணியால் சோகம் - சுவர் இடிந்து விழுந்து மாணவன் பலி

திருப்பூர் அருள்ஜோதிபுரத்தில் சாக்கடை கால்வாய் அமைக்க குழி தோண்டியபோது, வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் 10ஆம் வகுப்பு மாணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சிசிடிவி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.



திருப்பூர்: அருள்ஜோதிபுரம் பகுதியில்சாக்கடை கால்வாய் அமைக்க குழி தோண்டியபோது, வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 10ம் வகுப்பு மாணவன் உயிரிழந்தான்.



திருப்பூர் மாநகராட்சி, முதலாம் மண்டலத்திற்குட்பட்ட அருள்ஜோதிபுரம் பகுதியில் சாக்கடை கால்வாய் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. சாக்கடை கால்வாய் அமைக்க தோண்டப்பட்ட குழியின் காரணமாக அப்பகுதியில் இருந்த வீட்டின் சுற்றுச்சுவர்கள் பலமிழந்து காணப்பட்டது.



இந்நிலையில் சாலைக்கும், வீட்டிற்கும் நடுவே தோண்டிய குழியின் இடைவெளியைக் கடக்க அப்பகுதியைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு படிக்கும் அபிராம் என்ற மாணவன், மரப்பலகையைக் குறுக்கே போடுவதற்கு முற்பட்டபோது, வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து அபிராம் மீது விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தான்.

இதனையடுத்து அருகிலிருந்தவர்கள் உடனடியாக சுவர் இடிபாடுகளை அப்புறப்படுத்தி மாணவனின் உடலை மீட்டனர். சம்பவம் குறித்து திருப்பூர் வடக்கு போலீசார் அங்குப் பதிவாகியிருந்த சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக வைத்து விசாரணை செய்து வருகின்றனர். மாணவனின் தந்தை கடந்த பத்து நாட்களுக்கு முன்பு இறந்தது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...