டாஸ்மாக் டெண்டர் விவகாரம் - அறப்போர் இயக்கத்திற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி எச்சரிக்கை!

டாஸ்மாக் டெண்டர் விவகாரம் தொடர்பாக அறப்போர் இயக்கம் வெளியிட்டுள்ள பொய்யான குற்றச்சாட்டு அறிக்கையை திரும்ப பெற வேண்டும். இல்லையெனில் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செந்தில்பாலாஜி எச்சரித்துள்ளார்.



கோவை: கோவை கருமத்தம்பட்டியில், விசைத்தறியாளர்கள் ஏற்பாடு செய்துள்ள நன்றி தெரிவிக்கும் பாராட்டு விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் நாளை பங்கேற்க உள்ளார். இந்த விழா நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி பார்வையிட்டார்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:



தமிழக முதல்வருக்கு விசைத்தறி நெசவாளர்கள் சார்பில் கருமத்தம்பட்டியில் பாராட்டு விழா நடைபெற உள்ளது. இதில், பல ஆயிரக்கணக்கான நெசவாளர்கள் கலந்துகொள்கின்றனர். விழா ஏற்பாடுகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றது.

டாஸ்மாக் டெண்டர் தொடர்பாக அறப்போர் இயக்கம் ஜெயராமன் வெளியிட்டுள்ள குற்றச்சாட்டு அறிக்கையை திரும்ப பெற வேண்டும். இல்லையென்றால் அவர் மீது வழக்கறிஞர் மூலம் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

இடைத்தேர்தல் நடைபெற்றதால், ஈரோடு நீங்களாக, 43 குடோனில் இருந்து மொத்தம் 96 கோடி ரூபாய்கான வருட டெண்டர் அறிவிப்பில் வழக்கமான நடைமுறையே பின்பற்றப்பட்டது. அறப்போர் இயக்கத்தின் மீது மிகுந்த மரியாதை உள்ளது.

ஆயிரம் கோடி ரூபாய் டெண்டர் என்பது அபத்தமானது. அவர் கூறியதை திரும்ப பெறவில்லை எனில் நீதிமன்றத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார். அப்போது, தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன், முன்னாள் எம்.பி நாகராஜ், நித்தியா மனோகரன், ஏர்போர்ட் ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Newsletter

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...