புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் சார்பில் தாராபுரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அரசு ஊழியர்கள் கண்களில் கருப்பு துணிகளை கட்டி முழக்கங்களை எழுப்பினர்.
திருப்பூர்: புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி தாராபுரத்தில் சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் என்ற பங்களிப்பு ஓய்வூதிய திட்ட இயக்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அரசு ஊழியர்கள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்கள் இணைந்துதாராபுரம் வருவாய் வட்டாட்சியர் அலுவலக வாயிலின் முன்பு கண்களுக்கு கருப்பு துணிகளை கட்டிக்கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் வட்டக்கிளை இணைச் செயலாளர்ஹரிசங்கர் தலைமை தாங்கினார். அதில், புதிய ஓய்வூதிய திட்டத்தை அரசு ரத்து செய்ய வேண்டும் என்றும், மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தையே அமல்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
பொது நூலகத்துறை அலுவலர் சங்கத்தின் மாநில நிர்வாகிபால ராஜசேகர், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர்ஈஸ்வரமூர்த்தி, கிராம சுகாதார செவிலியர்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் தமயந்தி, சாலை பராமரிப்பு ஊழியர்கள் சங்கத்தின் கோட்ட நிர்வாகி பீட்டர், கால்நடைத்துறை விஜயகுமாரி, உட்பட பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.