புதிய பென்ஷன் திட்டத்திற்கு எதிர்ப்பு - தாராபுரத்தில் நூதன ஆர்ப்பாட்டம்!

புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் சார்பில் தாராபுரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அரசு ஊழியர்கள் கண்களில் கருப்பு துணிகளை கட்டி முழக்கங்களை எழுப்பினர்.



திருப்பூர்: புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி தாராபுரத்தில் சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் என்ற பங்களிப்பு ஓய்வூதிய திட்ட இயக்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

அரசு ஊழியர்கள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்கள் இணைந்துதாராபுரம் வருவாய் வட்டாட்சியர் அலுவலக வாயிலின் முன்பு கண்களுக்கு கருப்பு துணிகளை கட்டிக்கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் வட்டக்கிளை இணைச் செயலாளர்ஹரிசங்கர் தலைமை தாங்கினார். அதில், புதிய ஓய்வூதிய திட்டத்தை அரசு ரத்து செய்ய வேண்டும் என்றும், மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தையே அமல்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

பொது நூலகத்துறை அலுவலர் சங்கத்தின் மாநில நிர்வாகிபால ராஜசேகர், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர்ஈஸ்வரமூர்த்தி, கிராம சுகாதார செவிலியர்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் தமயந்தி, சாலை பராமரிப்பு ஊழியர்கள் சங்கத்தின் கோட்ட நிர்வாகி பீட்டர், கால்நடைத்துறை விஜயகுமாரி, உட்பட பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...