தாராபுரத்தில் வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

பதவி உயர்வு, காலியிடங்கள் நிரப்புதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தாராபுரத்தில் தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர்கள் தங்களது அலுவலகத்தில் இருந்து, ஒரு மணி நேரம் வெளிநடப்பு செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வருவாய் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி மாலை ஒரு மணி நேரம் பணிகளைப் புறக்கணித்து அலுவலகத்தை விட்டு வழிநடப்பு செய்து வருவாய் துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தின் மாவட்டத் துணைத் தலைவர் விதுர்வேந்தன் தலைமையில் நடைபெற்ற ஈரோடு மாவட்ட மையத்தின் சார்பிலான இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, அரசின் அச்சாணியாக ஆணிவேராக இருந்துவரும் வருவாய்த்துறை அலுவலர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது எனவும், பறிக்கப்பட்ட வருவாய் துறை அலுவலர்களின் அதிகாரங்களை அரசு திரும்ப வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

மேலும், வருவாய்த்துறை அலுவலர்களின் நிறுத்தி வைக்கப்பட்ட பதவி உயர்வு மீண்டும் வழங்கப்பட்டு, துறையில் காலியாக உள்ள பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும், கடந்த நான்காண்டுகளாக துணை ஆட்சியர் பட்டியல் வெளியிடப்படாமல் இருப்பதை உடனடியாக அரசு வெளியிட வேண்டும், துணை வட்டாட்சியர் பட்டியல் திருத்தத்தின்போது பாதிக்கப்பட்ட துணை வட்டாட்சியர்களின் பணி பாதுகாப்பை உறுதி செய்யும் அரசாணையும், பட்டாதாரி அல்லாத வருவாய்த்துறை அலுவலர்களுக்கான பதவி உயர்வு ஆணையும் இதுவரை வெளியிடப்படவில்லை. எனவே, உடனடியாக பதவி உயர்வு ஆணையை வெளியிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர்கள் தங்களது அலுவலகத்தை விட்டு ஒரு மணி நேரம் வெளிநடப்பு செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட வட்ட கிளை நிர்வாகிகள், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் சங்கத்தின் முன்னணி உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...