பொள்ளாச்சியில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் - விவசாயிகள் வெளிநடப்பால் பரபரப்பு

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் சார் ஆட்சியர் பிரியங்கா இல்லாமல் விவசாயிகள் குறைதீர் முறையீட்டுக் கூட்டம் நடைபெற்றது. சார் ஆட்சியர் கலந்துக் கொள்ளாமல் நடக்கும் கூட்டத்தை புறக்கணித்து விவசாயிகள் வெளிநடப்பு செய்தனர்.



கோவை: தமிழகத்தில் விவசாயிகள் முறையீட்டுக் கூட்டம் கடந்த ஒன்றரை வருடங்களாக நடைபெறாத நிலையில், தற்சமயம் விவசாயிகளுக்கு குறைதீர்க்கும் கூட்டம் நடத்த வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன் அடிப்படையில் பொள்ளாச்சி சார் ஆட்சியர் பிரியங்கா விவசாயிகளுக்கும் விவசாய சங்கங்களுக்கும் விவசாய குறைத்தீர் கூட்டம் நடைபெறுவதாக பத்திரிக்கை வாயிலாகவும், தொலைபேசியில் குறுஞ்செய்தி அனுப்பியும் அழைப்பு விடுத்திருந்தார்.

அதன்படி, பொள்ளாச்சி, ஆனைமலை, கோட்டூர், மற்றும் வேட்டைக்காரன் புதூர் போன்ற பகுதிகளில் இருந்து சுமார் 50 க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்திருந்தனர்.



சார் ஆட்சியர் பணி நிமித்தமாக சென்னை சென்றுவிட்டதால் தாசில்தார் மற்றும் அரசு துறை அதிகாரிகள் மட்டுமே இருந்தனர். விவசாயிகளிடம் உங்கள் குறைகளை நீங்கள் விண்ணப்பமாக கொடுத்து விட்டுச் செல்லுங்கள் என அதிகாரிகள் கூறியதாகத் தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த விவசாயிகள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வெளியிடப்பு செய்தனர்.

மேலும் சார் ஆட்சியர் பணி நிமித்தமாக சென்னை செல்கிறார் என்ற தகவலை எங்களுக்கு முன்கூட்டியே சொல்லியிருந்தால் நாங்கள் விவசாய பணியினை விட்டு விட்டு இங்கு வந்திருக்க மாட்டோம் எனவும் கூறி அரசு அதிகாரிகள் நடத்திய கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கூட்டத்தை புறக்கணித்து விவசாயிகள் வெளிநடப்பு செய்ததால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...