கோவை தொண்டாமுத்தூர் அருகே வட மாநில பெண் தொழிலாளர்களிடம் தகராறு - இருவர் கைது

கோவை சித்திரைச் சாவடி அணை அருகே தோட்டத்தில் வேலைப் பார்த்துக் கொண்டிருந்த வடமாநில பெண் தொழிலாளர்களிடம் ஆபாசமாக செய்கை காட்டி தகராறில் ஈடுபட்ட ஏகனூர் தோட்டத்தை சேர்ந்த சந்திரபிரகாஷ், முத்துக்குமார் என இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.


கோவை: தொண்டாமுத்தூர் அருகே வட மாநில பெண் தொழிலாளர்களிடம் தகராறில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்தனர்.

கோவை தொண்டாமுத்தூர் நரசிபுரம் ஏகனூர் தோட்டத்தை சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் (25). இவரது நண்பர் முத்துக்குமார் (31) இருவரும் வியாழக்கிழமை கோவை சித்திரைச்சாவடி அணை அருகே குடிபோதையில் குளித்துக் கொண்டிருந்ததாக தெரிகிறது.

அப்போது அப்பகுதி எதிரே இருந்த தோட்டத்தில் அசாம் மாநிலத்தை சேர்ந்த பெண் தொழிலாளர்கள் தோட்டவேலை செய்து கொண்டிருந்தனர். குடி போதையில் இருந்த சந்திரபிரகாஷ் மற்றும் முத்துக்குமார் ஆகியோர் தங்களது உடைகளை கழட்டி விட்டு வட மாநில பெண் தொழிலாளர்களை நோக்கி ஆபாசமாக செய்கையை காட்டியவாறு, அவதூறாக பேசி தகராறு செய்துள்ளனர்.

இதையடுத்து அங்கிருந்த தருண் பாலாஜி என்ற இளைஞர் தொண்டாமுத்தூர் போலீசுக்கு தகவல் அளித்தார். இதையடுத்து அங்கு வந்த போலீசார் சந்திரபிரகாஷ், முத்துக்குமார் ஆகிய இருவரையும் பிடித்து, அவர்கள் மீது பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...