கோவையில் டிராவல்ஸ் ஊழியர் மீது தாக்குதல் - போதை இளைஞர் கைது

கோவை பீளமேடு பகுதியில் குடிபோதையிலிருந்ததால் பேருந்துக்கு டிக்கெட் கொடுக்க மறுத்த தனியார் டிராவல்ஸ் ஊழியர் கீர்த்தனா என்பவரை தகாத வார்த்தையில் பேசி, தாக்கிய வெங்கடேஸ்வரன் என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


கோவை: பீளமேடு பகுதியில் டிக்கெட் கொடுக்க மறுத்த பெண் ஊழியரை தாக்கிய இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

கோவை பீளமேடு புதுரை சேர்ந்தவர் கீர்த்தனா (25). இவர் காந்திபுரம் முதலாவது வீதியில் உள்ள டிராவல்ஸ் நிறுவனத்தில் டிக்கெட் புக் செய்யும் வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று இவர் பணியிலிருந்த போது சென்னைக்கு செல்வதற்கு டிக்கெட் கேட்டு வாலிபர் ஒருவர் வந்தார். அவர் குடிபோதையிலிருந்ததால் கீர்த்தனா டிக்கெட் கொடுக்க மறுத்தார். இதனால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர் தகாத வார்த்தைகளால் பேசி கீர்த்தனாவின் கன்னத்தில் தாக்கினார்.

பின்னர் கொலை மிரட்டல் விடுத்து சென்றார். இதுகுறித்து கீர்த்தனா கொடுத்த புகாரில் காட்டூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். இதில் இளம் பெண்ணை தாக்கியது சென்னை மடிப்பாக்கத்தைச் சேர்ந்த வெங்கடேஸ்வரன்(44) என்பதும், டிரைவராக வேலை பார்த்து வருவதும் தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...