'இளைய நிலா' பாடல் புகழ் கிட்டார் கலைஞர் சந்திரசேகர் மறைவு - இசை ரசிகர்கள் இரங்கல்!

இசைஞானி இளையராஜாவுடன் முதல் படத்தில் இருந்து பணியாற்றி வந்த, மூத்த கிட்டார் கலைஞரும், இளைய நிலா பாடலின் இசைத்துணுக்குகளை வாசித்து புகழ் பெற்றவருமான கிட்டார் கலைஞர் சந்திரசேகர் (79) மறைவுக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


சென்னை: பிரபல கிட்டார் கலைஞரான சந்திரசேகரின் மறைவு ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இளையராஜாவின் இசையில் வெளியான பல்வேறு பாடல்களில் கிட்டார் மற்றும் கீ போர்டு கலைஞராக பணியாற்றிய பிரபல கிட்டாரிஸ்ட் கலைஞர் சந்திரசேகர் (79) காலமானார். சந்திரசேகரின் மறைவு இசை ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் திரையுலகின் இசைஞானி இளையராஜாவும், பாடும் நிலா எஸ்.பி.பாலசுப்ரமணியம் ஆகியோர் இணைந்து பணியாற்றிய பாடல்கள் அனைத்துமே ரசிகர்களின் பேவரைட் லிஸ்டில் இடம்பெற்றிருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை என சொல்லலாம்.

இவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றியதில் பயணங்கள் முடிவதில்லை படத்தில் இடம்பெற்ற ‘இளைய நிலா பொழிகிறதே’ பாடலின் கிட்டார் இசைத் துணுக்குகளை வாசித்து புகழ்பெற்றவர் சந்திரசேகர். இளையராஜாவின் ‘பாடி வா தென்றலே’ மற்றும் ‘பாடும் வானம்பாடி’ உள்ளிட்ட பெரும்பாலான ஹிட் பாடல்களுக்கு சந்திரசேகர் கிட்டார் வாசித்துள்ளார்.

கே.வி. மகாதேவன், எம்.எஸ்.வி, இளையராஜா உள்ளிட்ட பல்வேறு இசையமைப்பாளர்களிடம் கிட்டாரிஸ்டாகவும், கீபோர்ட் கலைஞராகவும் பணியாற்றியுள்ளார்.

இவர், கன்னடம், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி படங்களில் பணியாற்றி உள்ளார். இளையராஜாவின் நீண்டகால நண்பரும், அன்னக்கிளி படத்தில் இருந்து பணிபுரிந்து வந்த மூத்த இசைக் கலைஞர் சந்திரசேகர் என்பது குறிப்பிடத்தக்கது.

சந்திரசேகர் மறைவுக்கு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...