உடுமலையில் கோயில் திருவிழா - கடவுள்களின் வேடமணிந்து ஆடிப்பாடிய பக்தர்கள்!

உடுமலை அருகே காட்டூரில் உள்ள ஸ்ரீ புது மாரியம்மன் கோயிலில் நடந்த திருவிழாவில், ஆண்கள் கடவுள் வேடம் அணிந்தும், பெண்கள் வேடம் அணிந்தும் குழந்தைகள் முருகன் விநாயகர் வேடம் அணிந்தும் வீதிகளில் ஊர்வலமாக சென்று வழிபட்டனர்.


திருப்பூர்: உடுமலை அடுத்துள்ள கிழவன் காட்டூர் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ புது மாரியம்மன் திருக்கோவில் திருவிழா கடந்த நான்காம் தேதி முதல் கம்பம் போடுதல் திருமூர்த்திமலை சென்று தீர்த்தம் எடுத்து வருதல் மற்றும் பூவோடு எடுத்தல் திருகல்யாண நிகழ்ச்சி என மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது.



இந்த நிலையில் முக்கிய நிகழ்வாக, ஆண்கள் கடவுள் வேடம் அணிந்தும், பெண்கள் வேடம் அணிந்தும் குழந்தைகள் முருகன் விநாயகர் வேடம் அணிந்தும் பக்தி பாடல்களுக்கு ஆட்டம் பாட்டத்துடன் ஊரின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக சென்று சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர். இதனை சுற்றுவட்டார கிராம மக்கள் திரளான கண்டு களித்தனர்.



இது குறித்து மாறுவேடம் அணிந்த பக்தர் கூறுகையில், வருடந்தோறும் கோவில் திருவிழாவில் முன்னோர்கள் கூறிய அறிவுரையின்படி நோய்நொடியின்றி கிராம மக்கள் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் என்பதற்காக பக்தர்கள் கடவுள் வேடம் அணிந்து சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டு வருகிறோம் என்றார்.

Newsletter

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...