உடுமலை அருகே காட்டூரில் உள்ள ஸ்ரீ புது மாரியம்மன் கோயிலில் நடந்த திருவிழாவில், ஆண்கள் கடவுள் வேடம் அணிந்தும், பெண்கள் வேடம் அணிந்தும் குழந்தைகள் முருகன் விநாயகர் வேடம் அணிந்தும் வீதிகளில் ஊர்வலமாக சென்று வழிபட்டனர்.
திருப்பூர்: உடுமலை அடுத்துள்ள கிழவன் காட்டூர் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ புது மாரியம்மன் திருக்கோவில் திருவிழா கடந்த நான்காம் தேதி முதல் கம்பம் போடுதல் திருமூர்த்திமலை சென்று தீர்த்தம் எடுத்து வருதல் மற்றும் பூவோடு எடுத்தல் திருகல்யாண நிகழ்ச்சி என மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் முக்கிய நிகழ்வாக, ஆண்கள் கடவுள் வேடம் அணிந்தும், பெண்கள் வேடம் அணிந்தும் குழந்தைகள் முருகன் விநாயகர் வேடம் அணிந்தும் பக்தி பாடல்களுக்கு ஆட்டம் பாட்டத்துடன் ஊரின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக சென்று சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர். இதனை சுற்றுவட்டார கிராம மக்கள் திரளான கண்டு களித்தனர்.

இது குறித்து மாறுவேடம் அணிந்த பக்தர் கூறுகையில், வருடந்தோறும் கோவில் திருவிழாவில் முன்னோர்கள் கூறிய அறிவுரையின்படி நோய்நொடியின்றி கிராம மக்கள் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் என்பதற்காக பக்தர்கள் கடவுள் வேடம் அணிந்து சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டு வருகிறோம் என்றார்.
இந்த நிலையில் முக்கிய நிகழ்வாக, ஆண்கள் கடவுள் வேடம் அணிந்தும், பெண்கள் வேடம் அணிந்தும் குழந்தைகள் முருகன் விநாயகர் வேடம் அணிந்தும் பக்தி பாடல்களுக்கு ஆட்டம் பாட்டத்துடன் ஊரின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக சென்று சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர். இதனை சுற்றுவட்டார கிராம மக்கள் திரளான கண்டு களித்தனர்.
இது குறித்து மாறுவேடம் அணிந்த பக்தர் கூறுகையில், வருடந்தோறும் கோவில் திருவிழாவில் முன்னோர்கள் கூறிய அறிவுரையின்படி நோய்நொடியின்றி கிராம மக்கள் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் என்பதற்காக பக்தர்கள் கடவுள் வேடம் அணிந்து சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டு வருகிறோம் என்றார்.