துடியலூர் அருகே ஏர் பேக் திறந்ததால் கட்டுப்பாட்டை இழந்த கார் வீட்டின் மீது மோதி விபத்து!

கோவை கே.என்.ஜி.புதூர் சாலையில் சென்ற கார் ஒன்று மாரியம்மன் கோவில் அருகே இருசக்கர வாகனத்தின் மீது மோதிய நிலையில், திடீரென காரின் ஏர் பேக் திறந்ததால் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த வீட்டின் மீது மோதி விபத்துக்குள்ளானது.


கோவை: கோவை மாவட்டம் துடியலூர் அருகே ஏர்பேக் திறந்ததால் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர வீட்டின் மீது மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவில்மேடு தவசி நகர் பகுதியை சேர்ந்தவர் மருதாச்சலம் மூர்த்தி (37). சொந்தமாக தொழில் செய்து வரும் இவர் இன்று பிற்பகல் தனது காரில் கே.என்.ஜி புதூர் பகுதியில் இருந்து ஜி.என்.மில்ஸ் சாலையில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவர் காரை வேகமாக ஓட்டி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மருதாச்சலம் மூர்த்தி கே.என்.ஜி புதூர் மாரியம்மன் கோவில் அருகே வந்தபோது முன்னால் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதியுள்ளார். இதில் இருசக்கர வாகனத்தில் வந்த ஐயன்(40) என்பவர் படுகாயம் அடைந்தார்.



இந்நிலையில் விபத்தின் போது காரில் இருந்த ஏர் பேக் திடீரென திறந்ததால் கட்டுப்பாட்டை இழந்த கார் வலது புறத்தில் இருந்த வீட்டின் மீது மோதி நின்றது. இதில் நல்வாய்ப்பாக வீட்டின் அருகே இருந்தவர்களுக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை.



இச்சம்பவம் தொடர்பாக துடியலூர் போலீசார் மருதாச்சலம் மூர்த்தி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Newsletter

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...