வடமாநில தொழிலாளர்களிடம் செல்போன் பறிப்பு - போத்தனூர் போலீசார் விசாரணை

கோவை போத்தனூர் பகுதியில் நடந்து சென்ற வடமாநில தொழிலாளர்களான பரதல்தாஸ், ராஜூ ஆகியோரிடம் செல்போன் மற்றும் பணத்தைப் பறித்த 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


கோவை: போத்தனூர் பகுதியில் வடமாநில தொழிலாளர்களிடம் செல்போனை பறித்த 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கோவை போத்தனூர் பகுதியில் வடமாநில தொழிலாளர்களான பரதல்தாஸ் , ராஜூ ஆகிய இருவரும் தங்கி கட்டிட வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் இருவரும் ஈச்சனாரியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு நடந்து சென்று கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக பைக்கில் 2 வாலிபர்கள் பரதல்தாஸை அடித்து மிரட்டி அவரிடமிருந்து செல்போனை பறித்துத் தப்பிச் சென்றனர். சிறிது நேரத்திற்குப் பின்னர் ஒரு காரில் அந்த வழியாக அந்த நாலு பேர் ராஜுவை தாக்கி கத்தி முனையில் அவரிடமிருந்து ரூ.400 பணத்தைப் பறித்து தப்பி சென்றனர்.

இது குறித்து வடமாநில தொழிலாளர்களின் நிறுவன உரிமையாளர் மோகன்ராஜ் போத்தனூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில், வழக்கு பதிவு செய்த போலீசார், வடமாநில தொழிலாளர்களைத் தாக்கி பணம் மற்றும் செல்போனை பறித்து சென்ற 6 பேர் கொண்ட கும்பலை தேடி வருகின்றனர்.

Newsletter

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...