உலக மகளிர் தினம் - பல்லடம் அரசு பள்ளியில் பெண்களுக்கு சட்ட விழிப்புணர்வு!

மகளிர் தினத்தை ஒட்டி சட்டப்பணிகள் குழு சார்பில் பல்லடம் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி மாணவிகளுக்கு, பெண்களுக்கான சட்டங்கள் குறித்து நீதிபதிகள் சித்ரா, சந்தான கிருஷ்ணசாமி ஆகியோர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.



பல்லடம்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பெண்களுக்கான சட்ட விழிப்புணர்வு முகாமில் பல்லடம் நீதிபதிகள் கலந்து கொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

உலக மகளிர் தின விழாவை முன்னிட்டு பல்லடம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சட்ட பணிகள் குழு சார்பில் பெண்களுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம் இன்று நடைபெற்றது.



இந்நிகழ்வில் குற்றவியல் மற்றும் நடுவர் நீதிபதி சித்ரா,சார்பு நீதிபதி சந்தான கிருஷ்ணசாமி, மூத்த வழக்கறிஞர் வெங்கடாசலபதி, தலைமை ஆசிரியர் சசிகலா ஆகியோர் கலந்து கொண்டனர்.



இதில் பெண்கள் பாதுகாப்பு குறித்தும், பெண் கல்வி குறித்தும், பெண்கள் அறிந்து கொள்ள வேண்டிய சட்டங்கள் குறித்தும் பள்ளி குழந்தைகளுக்கு விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டது.

மேலும் பெண்கள் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவிகளுக்கு சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட்டன.

Newsletter

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...