கோவை ரயில் நிலையம் அருகேயுள்ள தனியார் அரங்கில் நடைபெற்ற பெண்கள் தினவிழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை ஒட்டி அவருக்கு 7000 தபால் அட்டைகள் மூலம் வாழ்த்துச் செய்திகளை பெண்கள் அனுப்பி வைத்தனர்.
கோவை: கோவையில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் முதலமைச்சருக்கு பிறந்த நாள் வாழ்த்து செய்தியாக ஏழாயிரம் தபால் அட்டைகள் அனுப்பி வைக்கப்பட்டது.
கோவையில் பல்வேறு அமைப்புகள் சார்பில் ரயில் நிலையம் அருகில் உள்ள தனியார் அரங்கில் சர்வதேச மகளிர் தின விழா நடைபெற்றது. அமைப்பு சாரா தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர் முகமது ரஃபீக் தலைமையில் நடைபெற்ற இதில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரிய தலைவர் பொன்.குமார் கலந்துகொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் பொன்.குமார் பேசியதாவது, தமிழக அரசின் பல்வேறு மகளிர் மேம்பாட்டு திட்டங்கள் குறித்தும் இந்த திட்டங்களை சரியான முறையில் பெண்கள் பயன்படுத்தி சிறந்த தொழில் முனைவோராக மாற முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் முன்னதாக இந்திய அனைத்து ஆடைகளின் நல அமைப்பின் பெண்கள் சார்பாக ஏழாயிரம் தபால் அட்டையில் தமிழக முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்து செய்தி அனுப்பி வைக்கப்பட்டது.
தொடர்ந்து மீண்டும் மஞ்சப்பை திட்டத்தில் பயன்பெறும் விதமாக பைகள் தயாரிப்பில் பயிற்சிகள் முடித்த பெண்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இதே போல பசுமையை காக்கும் விதமாக பிளாஸ்டிக்கை ஒழிப்போம் என்ற உறுதி மொழியை பெண்கள் ஏற்றுக் கொண்டனர்.
கோவையில் பல்வேறு அமைப்புகள் சார்பில் ரயில் நிலையம் அருகில் உள்ள தனியார் அரங்கில் சர்வதேச மகளிர் தின விழா நடைபெற்றது. அமைப்பு சாரா தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர் முகமது ரஃபீக் தலைமையில் நடைபெற்ற இதில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரிய தலைவர் பொன்.குமார் கலந்துகொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் பொன்.குமார் பேசியதாவது, தமிழக அரசின் பல்வேறு மகளிர் மேம்பாட்டு திட்டங்கள் குறித்தும் இந்த திட்டங்களை சரியான முறையில் பெண்கள் பயன்படுத்தி சிறந்த தொழில் முனைவோராக மாற முடியும். இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் முன்னதாக இந்திய அனைத்து ஆடைகளின் நல அமைப்பின் பெண்கள் சார்பாக ஏழாயிரம் தபால் அட்டையில் தமிழக முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்து செய்தி அனுப்பி வைக்கப்பட்டது.
தொடர்ந்து மீண்டும் மஞ்சப்பை திட்டத்தில் பயன்பெறும் விதமாக பைகள் தயாரிப்பில் பயிற்சிகள் முடித்த பெண்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இதே போல பசுமையை காக்கும் விதமாக பிளாஸ்டிக்கை ஒழிப்போம் என்ற உறுதி மொழியை பெண்கள் ஏற்றுக் கொண்டனர்.