கோவையில் பெண்கள் தின விழா - முதல்வருக்கு 7000 பிறந்தநாள் வாழ்த்து அட்டைகளை அனுப்பிய பெண்கள்!

கோவை ரயில் நிலையம் அருகேயுள்ள தனியார் அரங்கில் நடைபெற்ற பெண்கள் தினவிழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை ஒட்டி அவருக்கு 7000 தபால் அட்டைகள் மூலம் வாழ்த்துச் செய்திகளை பெண்கள் அனுப்பி வைத்தனர்.


கோவை: கோவையில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் முதலமைச்சருக்கு பிறந்த நாள் வாழ்த்து செய்தியாக ஏழாயிரம் தபால் அட்டைகள் அனுப்பி வைக்கப்பட்டது.

கோவையில் பல்வேறு அமைப்புகள் சார்பில் ரயில் நிலையம் அருகில் உள்ள தனியார் அரங்கில் சர்வதேச மகளிர் தின விழா நடைபெற்றது. அமைப்பு சாரா தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர் முகமது ரஃபீக் தலைமையில் நடைபெற்ற இதில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரிய தலைவர் பொன்.குமார் கலந்துகொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் பொன்.குமார் பேசியதாவது, தமிழக அரசின் பல்வேறு மகளிர் மேம்பாட்டு திட்டங்கள் குறித்தும் இந்த திட்டங்களை சரியான முறையில் பெண்கள் பயன்படுத்தி சிறந்த தொழில் முனைவோராக மாற முடியும். இவ்வாறு அவர் கூறினார்.



நிகழ்ச்சியில் முன்னதாக இந்திய அனைத்து ஆடைகளின் நல அமைப்பின் பெண்கள் சார்பாக ஏழாயிரம் தபால் அட்டையில் தமிழக முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்து செய்தி அனுப்பி வைக்கப்பட்டது.

தொடர்ந்து மீண்டும் மஞ்சப்பை திட்டத்தில் பயன்பெறும் விதமாக பைகள் தயாரிப்பில் பயிற்சிகள் முடித்த பெண்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இதே போல பசுமையை காக்கும் விதமாக பிளாஸ்டிக்கை ஒழிப்போம் என்ற உறுதி மொழியை பெண்கள் ஏற்றுக் கொண்டனர்.

Newsletter

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...