நிதி நிறுவனம் நடத்தி பண மோசடி வழக்கில் 6 பேருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் கோர்ட் தீர்ப்பு

நாமக்கல் மாவட்டத்தில் சன்ரைஸ் டிரேடிங் கார்பரேஷன் என்ற நிதி நிறுவனம் நடத்தி தங்கம், பரிசுப் பொருட்கள், பணம் தருவதாக கூறி பொதுமக்களிடம் ரூ.74 லட்சம் வரையில் வசூலித்து, மோசடி செய்த 6 பேருக்கு தலா 10 ஆண்டு சிறை தண்டனை மற்றும் தலா 12 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து கோவை டான்பிட் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.


கோவை: நாமக்கல் மாவட்டம் பரமத்தி ரோட்டில் சன்ரைஸ் டிரேடிங் கார்பரேஷன் என்ற நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தை கடந்த 2010-ம் ஆண்டு காலக்கட்டத்தில் நாமக்கல்லை சேர்ந்த முத்துக்குமார் என்பவர் நடத்தி வந்தார்.

இதில், முருகானந்தம், சரவணக்குமார், மாதையன், விஜயபாரதி, லியாகத் அலி ஆகியோா் வேலை பார்த்து வந்தனர். இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெற்றுத்தருவதாக கூறி, பல்வேறு கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து உள்ளனர். குறிப்பாக மூன்று கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து முதலீட்டாளர்களை ஈர்த்திருக்கின்றனர்.

அதன்படி, முதலீடு செய்வோருக்கு தங்கம், பொருட்கள், பணம் போன்றவை தரப்படும் என தெரிவித்திருக்கின்றனர். இதனை நம்பி 46 முதலீட்டாளர்கள் ரூ.74 லட்சத்து 41 ஆயிரத்து 384 செலுத்தினர். ஆனால், கூறியது போன்று முதலீட்டாளர்களிம் பணத்தை பெற்றுக்கொண்டு திருப்பி கொடுக்காமல் மோசடியில் ஈடுபட்டிருக்கின்றனர். இதையடுத்து பாதிக்கப்பட்ட பொதுமக்கள், நாமக்கல் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர்.

அதன்பேரில் போலீசார் இவர்கள் 6 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து, வழக்கு விசாரணை கோவையில் உள்ள டான்பிட் நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது.



இந்த வழக்கில் சாட்சிகள் விசாரணைகள் நிறைவடைந்த நிலையில் தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. அதன்படி, முத்துக்குமார், முருகானந்தம், சரவணக்குமார், மாதையன், விஜயபாரதி, லியாகத்அலி ஆகிய 6 பேருக்கும் தலா 10 ஆண்டு சிறை தண்டனையும், ஒவ்வொருவருக்கும் தலா 12 லட்சத்து 60 ஆயிரம் வீதம், 75 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் அபராதமாக செலுத்த வேண்டுமென நீதிபதி ரவி உத்தரவிட்டுள்ளார்.

Newsletter

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...