பவாணியின் குறுக்கே கேரளா அணை கட்டும் பணியை நிறுத்த தமிழக அரசு நீதிமன்றத்தில் தடையாணை வாங்க வேண்டும் - தபெதிக கு.ராமகிருட்டிணன்

பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டுவதை தடுத்து நிறுத்த தமிழக அரசு விரைவாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து தடையாணை பெற வேண்டும் என கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன் தெரிவித்துள்ளார்.

தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன் இன்று கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் தமிழகத்தில் நடந்த அரசியல் குழப்பங்களை பயன்படுத்தி கேரள அரசு பவானி ஆற்றின் குறுக்கே தேக்கு வட்டை என்னும் பகுதியில் தடுப்பணையை கட்டி முடித்துள்ளது எனவும், மேலும் 6 இடங்களில் தடுப்பணை கட்ட திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்களும் விவசாயிகளும் தொடர்ந்து கோரிக்கைகள் வைத்தும் தமிழக அரசு விரைந்து வழக்கு தொடுத்து முறையாக வழக்காடாத காரணத்தால் தடையாணை பெற முடியவில்லை என கூறிய அவர், மேற்கு மண்டலத்தை சார்ந்த ஒருவர் முதல்வராக பொறுப்பேற்றுள்ள நிலையில் இந்த பிரச்சனைக்கு முழு கவனம் செலுத்தி மீண்டும் புதிய வழக்காக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்வதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

மேலும், வரும் 19 ஆம் தேதி கோவை மாவட்ட திமுக தலைமை அலுவலகத்தில் அனைத்து கட்சி மற்றும் பல்வேறு அமைப்பினர் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளதாகவும் இதில் கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் விவசாயிகளை ஒன்றுதிரட்டி கோவையிலிருந்து கேரளா செல்லும் வழித்தடங்களை அடைக்கும் வகையிலான போராட்டம் குறித்து முடிவெடுக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...