ஜி.ஆர்.டி கல்லூரி சார்பில் 'சுவட்ச் மாரத்தான்'


ஜி.ஆர்.டி கலை அறிவியல் கல்லூரி சார்பில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 'சுவட்ச் மாரத்தான்' என்னும் தூய்மை பணி நிகழ்ச்சி  இன்று காலை அவிநாசி சாலையில் உள்ள ஹோப் கல்லூரி முன்பு நடைபெற்றது. இதனை ஜி.ஆர்.டி கல்வி நிறுவன இயக்குநர் மற்றும் கல்லூரி துணை முதல்வர் ராமச்சந்திரன் ஒளி தீபம் ஏற்றி நிகழ்ச்சியை துவங்கி வைத்தார்.



இந்த தூய்மை பணி நிகழ்ச்சி அவிநாசி சாலையில் உள்ள ஹோப் கல்லூரி முதல் தொடங்கி ஆர்.ஜி புதூர் வரை நடைபெற்றது. இதில் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு வாசகங்களை கையில் ஏந்தியவாரும் சாலையில் ஓடி சென்றும் பொதுமக்களுக்கு தூய்மையை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் 1500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டும் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு குழுவாக பிரிந்து கொண்டு சாலைகளில் உள்ள குப்பைகளை சுத்தம் செய்தனர். இப்பணி காலை 7 முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.



இது குறித்து கல்லூரி மாணவி கூறுகையில்; பாரத பிரதமர் அறிவுரையின்படி தூய்மை இந்திய திட்டத்தின் கீழ் எங்கள் கல்லூரி மாணவர்கள் ஒன்றிணைத்து இப்பணியினை காலை முதல் செய்து வருகிறோம். எங்களுக்கு தேவையான உபகரணங்கள் அனைத்தும் கல்லூரி நிர்வாகம் செய்து கொடுத்துள்ளனர். இந்த தூய்மை பணியின் மூலம் பொதுமக்களுக்கு எங்களுடைய இந்த விழிப்புணர்வு சென்றடையும். கல்லூரி மாணவர்கள் இப்பணியை ஆர்வத்துடன் செய்து வருவதாகவும் அவர் கூறினார்.



Newsletter

கோவையில் கற்பகம் பார்மசி கல்லூரியில் 325 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் கற்பகம் பார்மசி கல்லூரியின் பட்டமளிப்பு விழா-2026 மே 2 ஆம் தேதி நடைபெற்றது. 242 பி.பார்ம், 6...

காதல் விவகாரத்தில் தற்கொலை குறுஞ்செய்தி அனுப்பிய கோவை கல்லூரி மாணவி மாயம்

கோவையில் தனியார் மருத்துவமனையில் பயிற்சி பெற்று வந்த கேரளாவைச் சேர்ந்த 23 வயதான கல்லூரி மாணவி மாயமான சம்பவம் பரபரப்பை ஏற...

கோவையில் 16 மையங்களில் இன்று நீட் தேர்வு: 7,181 பேர் பங்கேற்பு

கோவை மாவட்டத்தில் இன்று நடைபெறும் நீட் (NEET) நுழைவுத் தேர்வில், 16 மையங்களில் 298 அரசு பள்ளி மாணவர்கள் உட்பட மொத்தம் 7,...

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...