கோவை கட்டிட கட்டுமானத் தொழிலாளர் சங்கங்களின் சார்பில் பல்வேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

கோவை மாவட்ட அனைத்து கட்டிட கட்டுமானத் தொழிலாளர் சங்கங்களின் கூட்டமைப்பு கூட்டம் இன்று காலை 11 மணிக்கு பாப்பநாயக்கன் பாளையத்தில் உள்ள ஏ.ஐ.டி.யு.சி சங்க அலுவலகத்தில், அண்ணா கட்டுமானத் தொழிலாளர் சங்க மாவட்ட பொது செயலாளர் ஜி.முருகேஷ் தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழகத்தில் கடுமையான மணல் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் மணல் விற்பனையாளர்கள் ஒரு யூனிட் மணலை ரூ 10,000ம் வரை விலையை உயர்த்தி விற்கிறார்கள். ஆனால் அரசு நிர்ணயித்துள்ள விலையோ ஒரு யூனிட் ரூ 650 மட்டும்தான். அத்துடன் லாரி வாடகையும் சேர்த்து கணக்கிடப்பட வேண்டும். ஆனால் வியாபாரிகள் மணல் தட்டுப்பாட்டை பயன்படுத்தி மணல் விலையை கடுமையாக உயர்த்தி உள்ளார்கள். 

எனவே, சமீப காலமாக நமது மாவட்டத்தில் கட்டுமானப் பணிகள் எதுவும் நடப்பதில்லை. கட்டுமானப் பணிகள் நடக்காததால், தொழிலாளர்கள் வேலையின்றி பட்டினி கிடக்கிறார்கள். இந்த நிலை நீடித்தால் இன்னும் சில நாட்களில் பட்டினி சாவுகள் கூட நிகழலாம் என்ற அச்சம் ஏற்பட்டு உள்ளது. எனவே, இந்த விசயத்தில் அரசு உடனடியாக தலையிட்டு மணல் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தாலூக்கா தலைநகரங்களில் மணலை இருப்பு வைத்து அரசு நிர்ணயித்த விலைக்கு மணல் தட்டுப்பாடு இல்லாமல் பொதுமக்களுக்கு கிடைக்க ஏற்பாடு செய்யவேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுப்பது என்றும், கோரிக்கை நிறைவேறாத சூழ்நிலை நீடித்தால் வரும் மார்ச் 1ம் தேதி கோவை டவுன்ஹால் அருகில் உள்ள பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது. 

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...